கவியும் கதை சொல்லும் --கயல்விழி

சிட்டாய் பறந்தவள்
சிறகுடைக்கப் பட்டேனே .
சிறைக்குள் அடைப்பட்ட
சில்வண்டாய் ஆனேனே .

வலி என்னை வாட்டுகையில்
வழி தெரியாது தவிக்கின்றேன் .
உயிரான கவி வழியே
உண்மை நிலை உரைக்கின்றேன் .

சொந்தங்கள் சூழ உண்டு
துணையாக எவரும் இல்லை
என் துன்பம் பகிர்திடவே
என்னவனும் அருகில் இல்லை .

தலைகோதி மாடிசாய்க்க
தாயவள் உலகில் இல்லை .
தரித்திரமாய் பிறந்ததினால்
தந்தையும் இங்கு இல்லை .

தனிமை என்னை கொல்லுதே ..
மரணித்திட சொல்லுதே ..
கண்ணீரின் வெப்பம் தாங்காது
தலையணையும் விம்முதே .

தற்கொலை உகந்தது அல்ல
தமிழுக்கு அது அழகும் அல்ல
என்னைத்தேற்றிக் கொள்கின்றேன்
இதனால் தான் இன்னும் வாழ்கின்றேன்....!!!!!!!!!

எழுதியவர் : கயல்விழி (21-May-15, 6:04 pm)
பார்வை : 185

மேலே