முகம் தேடும் மனிதர்கள்

..."" முகம் தேடும் மனிதர்கள் ""...

அன்பை தொலைத்துவிட்டு
அரவணைக்க தவறிவிட்டு
ஆசையில் மூழ்கிக்கொண்டு
ஆணவத்தில் அடிமைப்பட்டு ,,,

இன்பங்களை தேடிக்கொண்டு
இழிவாகவே நடந்துகொண்டு
ஈகை குணத்தை மறந்துவிட்டு
ஈட்டுவதிலே எழுச்சிகொண்டு ,,,

உண்மைகளை மறைத்துவிட்டு
உள்ளங்களை கொன்றுவிட்டு
ஊனங்களாய் உலாவிக்கொண்டு
ஊமைகளாய் வாழ்ந்துகொண்டு ,,,

எடுத்துரைப்பை உதறிவிட்டு
எண்ணங்களில் வன்மம்கொண்டு
ஏளனமாய் பெருமைகொண்டு
ஏக்கங்களே சொத்தாய்கொண்டு ,,,

ஐவிரல்களையும் பிரித்துவிட்டு
ஐக்கியங்களை அழித்துவிட்டு ,,,

ஒவ்வாமையில் ஒட்டிக்கொண்டு
ஒழுக்கத்தையும் விரட்டிவிட்டு
ஒளடதமாய்யிர மறுத்துவிட்டு
ஒளவியத்தை பற்றிக்கொண்டு ,,,

(ஃ)ஆயுதங்கள் ஏந்தி திரிகிறார்.,...

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

ஒளடதம் = மருந்து
ஒளவியம் = பொறாமை

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (25-May-15, 10:39 am)
பார்வை : 87

மேலே