ஏமாற்றம் எதுவுமில்லை

அது ..
முன்பெல்லாம் ஓடிய நீரோடை
வற்றிப் போய் இருக்கும் இடம்..
அதில் துள்ளிய கெண்டைகளும்..
விவரமாக நின்றிருந்த கொக்குகளும்..
இப்போது காண முடிவதில்லை ..
எங்கே போயின எல்லாம் ..
என்று யோசிக்கும் வேளையில்
தூரத்தில் நீர் முன்னேறி மெல்ல
வந்து கொண்டிருந்தது..
கிட்ட வந்தவுடன் அந்த நீரில்
கால் நனைக்க
நின்றிருந்தேன்..
வெகுநேரம்..
கால்கள் ஈரமாகவில்லை..
கடைசி வரை..
எண்ணத்தில் வந்த ஓடை நீர்
எங்கே நின்று போனது..
என் எதிர்பார்ப்புகளை போல் ?
என்றேனும் வரும்..
என் கால் நனையும்
என்றே திரும்புகிறேன்..
ஏமாற்றம் எதுவுமில்லை!

எழுதியவர் : கருணா (27-May-15, 1:27 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 302

சிறந்த கவிதைகள்

மேலே