இடைத் தேர்தலில் நான் நிக்கமாட்டேன்

தாத்தா வழக்கமாக நீங்க எல்லாத் தேர்தலிலும் போட்டியிட்டு டெபாசிட் பணத்தைப் பறி கொடுப்பீங்க. இப்ப நடக்கப் போற இடைத் தேர்தலில் நிக்கமாட்டேன்னு சொன்னீங்களாமே. அது நிஜமா.
ஆமாண்டா முனியாண்டி. அது உண்மை தான். என் ஆயுசு முடிதீரக்குள்ள ஒலகத்திலே அதிகத் தேர்தல்ல நின்னவன்னு கின்னஸ் புத்தகத்திலெ எம்பேரு பதிவாகன்ணும்ங்கறது தான் என்னோட ஒரே ஆசை. ஒரு தேர்தல்ல கூட நான் 100 ஓட்டுக்கூட வாங்கினதில்லை. எனக்கு வெற்றி தோல்வி முக்கியமில்லை. என் குறிக்கோள் நெறவேறணும்.
சரி அப்ப ஏந்தாத்தா இந்தத் தேர்தல்ல நிக்கல.
அட முனியாண்டி நான் எப்பவுமே தேர்தலிலெ நிக்கறதுக்கு முன்னாடி என்னோட ஆஸ்தான ஜோசியர்கிட்ட ஆலோசனை பண்ணிட்டுத் தான் நிப்பேன். அவர நேத்துப் பாத்தேன். எனக்கு ஏழரை நாட்டு சனி பிடிச்சிருக்காம். அது ஆட்டிவச்சிருமாம். மூணு மாசங்கழிச்சுப் பரிகாரம் செய்யற வரைக்கும் என்னை வீட்டை விட்டு எங்கயும் வெளிலெ போகக் கூடாதுன்னு சொல்லிட்டார். இருக்கட்டும் அடுத்த வருஷம் ரெண்டு தொகுதிலெ நின்னுட்டாப் போச்சு. சட்டம் எடங்குடுத்தா 234 தொகுதிலெயும்கூடப் போட்டியிடுவென்.
தாத்தா உங்களுக்கு ஆயுசு கெட்டி. சீக்கிரம் சட்டத்தை மாத்திபனாலும் மாத்துவாங்க. கவலப் படாதீங்க.