நான் மகானல்ல

நான் மகானல்ல

எனது ஆசைகளையெல்லாம்
படடியலிட்டேன் - அதில்
கடைசியில் நின்றது
புத்தனாகும் ஆசை
எல்லா ஆசைகளையும்
துறந்துவிட்டு
புத்தனாவதா -இல்லை
எல்லோர் ஆசைகளையும்;
நிறைவேற்றிவிட்டு
புத்தனாவதா என்ற
மனக்குழப்பம் என்னுள்ளே.
இருப்பவன் துறந்தான்
புத்தனானான்
இல்லாதவன் துறப்பதில்
என்ன அர்த்தம்
எல்லோர் ஆசைகளையும்
நிறைவேற்றினேன்
இறுதியில் புத்தனாகும்
ஆசையை மட்டும்
துறந்தேன்
புத்தனாவது எளிது
மனிதனாக வாழ்வது
கடினம் என்ற ஞானம்
எனக்குப் பிறந்தது!

ஜெ.பி

எழுதியவர் : ஜெ.பி (31-May-15, 11:00 pm)
பார்வை : 98

மேலே