கிறுக்கல்கள்

கண்ணில் பட்டவைகள்
எல்லாம் கிறுக்கல்களாய் தோன்ற..
கிறுக்கல்களை..
கலைத்துக் ..கலைத்து..
கலைத்து..
புதியதாய்..
புதுமையாய்..
கரும்பலகையில்
கவிதையென்று ஒன்றை ..
எழுதினேன்..
கண்ணுக்கே தெரியவில்லை..
கரிக்கட்டியால் எழுதியதை
கரும்பலகை காட்டவில்லை..
தெரிந்தவரை ..
எழுத்துக் கூட்டி
படித்து பார்த்தேன்..
கிறுக்கல்களை விட
கேவலமாயிருந்தது!...
கிறுக்கல்கள் ..
எதுவென்றும் புரிந்தது!

எழுதியவர் : கருணா (6-Jun-15, 2:39 pm)
Tanglish : kirukkalkal
பார்வை : 208

மேலே