சே எனும் யுகநாயகன்

----------------------------------
தைரியத்தின் டைரியில்
எல்லா பக்கத்திலும்
இவன் இருக்கிறான்.
எதிரிகளின் அச்சத்தில்
இவன் பெயர் அச்சாகியிருக்கும்
துப்பாக்கியின் தோட்டாக்களும்
இவனோடு புரட்சிப்பேசியிருக்கும்.
இவன் தலைமுடியும்
பொதுவுடைமை பேசியிருக்கும்.
யாருக்கு தெரியும்
இவன் இந்நேரம்
வேறொரு அவதாரத்தில்
இந்த பிரபஞ்சத்தின்
ஏதோ ஓர் மூலையிலிருந்து
கொடுங்கோலர்களை அழிக்கும்
புரட்சிப்படைகளை
மிரட்சியான
தன் தலைமையிலே
செதுக்கி உருவாக்கியிருக்க கூடும்
சே...............!
சே... குவேரா..........!
வா..............
என் இந்தியத்தேசமும்
உன்னை வரவேற்கக்கூடிய
கொடுமைகளை தாங்கித்தான்
மெளனமாய் கதறுகிறது...!
நீ இருப்பாய்...!
எங்கேனும்..
எந்த ஒரு மனிதனின்
வீரத்திலும்
கொள்கையிலும்
திமிராகவே
வாழ்ந்துதானே இருக்கிறாய்.!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
என்னுயிர் சே............!
--
இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (14-Jun-15, 8:48 am)
பார்வை : 107

மேலே