காதலியை வர்ணித்து கவிதை

கண்மணி!
என் முகம் பிரதிபலிக்கும்
உன் கருவிழிகள்
எனக்கு மட்டும் சொந்தமடி...
ஜீவரசி!
நான் விடும் சுவாசம்
என் ஜீவன் நீயடி...
என் மேல் மட்டும் படரும்
உன் சுவாசம்
எனக்கு மட்டும் சொந்தமடி...
புன்னகை பூ!
தேன் சிந்தும் உன் இதழ்
உதிர்க்கும் புன்னகை
பூக்களை பறிக்க உரிமை உடையவன் நானடி....
அந்த புன்னகை பூக்கள் அத்தனையும்
எனக்கு மட்டும் சொந்தமடி...



என் அன்னை!
அன்னை முகம் கண்டதில்லை நான்
அவளின் அரவணைப்பு
அன்பு உன்னிடம் கண்டேன் நான்....
ஆதலால் உன் அன்னைக்கு உரிய அன்பு
எனக்கு மட்டும் சொந்தமடி...
என் தோழி!
தோல் கொடுத்து என் துயரம் எல்லாம்
மறக்கச்செய்யும் என் தோழி நீயடி..
ஆதலால் உன் தோழமை
எனக்கு மட்டும் சொந்தமடி...
என் மணவாட்டி!
மங்காத ஒளியாய்
என் வாழ்வில் நீ வந்ததால்
வசந்தம் என் வாசல் தேடி வந்தது
மங்கையே!
நீ எனக்கு மட்டும் சொந்தமடி......






என் மகளே!
நீ செய்யும் சிறு சிறு குறும்புகளால்
என் மனதில் பட்டாம் பூச்சி பறக்கும்
ஆனந்தம் என் மனதில் வட்டமிடும்...
உன் உருவில் நம் எதிர்கால மகளை காண்பதால்
நீ என் மகளடி!
உன் மகளுக்குரிய அன்பு
எனக்கு மட்டும் சொந்தமடி...

படைப்பு:
----------------
சத்யா ஏஞ்சல்
சேஷா சாய் விடுதி
ஏலேக்ட்ரோனிக் சிட்டி
பெங்களூர்-100
அலைபேசி:09036267542

எழுதியவர் : (17-Jul-15, 2:29 pm)
பார்வை : 517

மேலே