Sathyaangel - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Sathyaangel |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 25-Feb-1984 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 96 |
புள்ளி | : 39 |
இறைவனயும் அவன் படைப்பையும் நேசிப்பவள்...
மாற்றுத்திறனாளி என்றவுடன் மனம் வருந்தும் மன்னவன்
அவளின் அக அழகை காண மறந்து(மறுத்து) மணம் கொள்ள
மறுப்பது ஏனோ...
அன்பே!
அன்னமே உனக்கு பெயர்கள் ஆயிரம்
நீ சுமக்கும் சுமைகள் பிறருக்கு சுகம்
ஆனால்,
நீ அதில் நீச்சல் அடிப்பது உனக்கு மட்டுமே தெரியும்....
எத்தனை சோதனை வந்தாலும்
அதில் சாதனை படைக்கும் ஷக்தி உனக்கு மட்டும் உள்ளது.......
கனவிலும் மறந்து விடாதே
என் அன்பு தோழியே!!!
மங்கையர் தின நல்வாழ்த்துக்கள்.........
கண்மணி!
என் முகம் பிரதிபலிக்கும்
உன் கருவிழிகள்
எனக்கு மட்டும் சொந்தமடி...
ஜீவரசி!
நான் விடும் சுவாசம்
என் ஜீவன் நீயடி...
என் மேல் மட்டும் படரும்
உன் சுவாசம்
எனக்கு மட்டும் சொந்தமடி...
புன்னகை பூ!
தேன் சிந்தும் உன் இதழ்
உதிர்க்கும் புன்னகை
பூக்களை பறிக்க உரிமை உடையவன் நானடி....
அந்த புன்னகை பூக்கள் அத்தனையும்
எனக்கு மட்டும் சொந்தமடி...
என் அன்னை!
அன்னை முகம் கண்டதில்லை நான்
அவளின் அரவணைப்பு
அன்பு உன்னிடம் கண்டேன் நான்....
ஆதலால் உன் அன்னைக்கு உரிய அன்பு
எனக்கு மட்டும் சொந்தமடி...
என் தோழி!
தோல் கொடுத்து என் துயரம் எல்லாம்
மறக்கச்செய்யும் என் தோழி நீயடி
அன்பே!
கடன் அன்பை முறிக்கும்
ஆதலால்,
நான் தந்த காதல் கடனை
எனக்கே திரும்ப தந்துவிடு
என்னை காதலிக்கிறேன்
என்னும் பதிலைச்சொல்லி....
குப்பை பிரசவித்த
குருதிக்
குடிகாரன்
சப்பை சாதுர்யன்
சற்றும்
அடங்காதவன்
இடைவிடாத சிறகடிப்பு
இரவுறக்கம்
பகல்கனவு
வையுருவீங்கும் வாயுறிஞ்சி
மயங்கி கிறங்கும்
வாயுறிஞ்சி
வலைவேண்டா தலைக்காரன்
கொலைசெய்யா
கொலைகாரன்
வேப்பிலை எரிந்தும்
வேதியல்
மருந்தும்
வீதிகளிலும் வீணாகி
வீடுகளிலும்
வீணாகி
தோற்றுத் தோற்றுத்
தொங்கின
தோற்று
கொசு வேட்கை
தீக்கணும்
தீரணும்
மாசு கொள்கை
மாத்தணும்
மாறனும்
அலைகளென
ஆழங்களென
மவுனங்களென
மர்மங்களென
சிறுநகர்வோடும்
சீற்றங்கலோடும்
வெறுமனே வெளிநோக்கி
விரிந்து பரந்து
விசாரிப்பின்றி கிடக்கிறது
கடல்!!!
கடல்போலவே
விசாரிப்பின்றி கிடக்கிறது
விலையில்லாதவனின்
விளிம்புநிலை
வியாக்கியானங்கள்
==========================================
நீ உலகைத் தேடவும்
உலகம் உன்னைத் தேடவும் ஓர்
உலகமகா உறுப்பு
==========================================
அழைப்பை ஏற்பதும்
தவிர்ப்பதும் அழைத்தவன் கோணத்தில்
அதிர்ஷ்டமே
==========================================
கண்விழித்ததும்
கைதேடும் அழைப்பு வரலாறு
வரலாறு காணாதது
==========================================
ரூ.20000 கைபேசிக்கு
ரூ.20 ரீசார்ஜு செய்தால்
21-ம் நூற்றாண்டு இளைஞனவன்
==========================================
சாவு வீட்டிலோ நடு ரோட்டிலோ
சாவடிப்பாள் டெலி காலிங்
எமதேவதை
==========================================
ஊனமாய் பிறந்தேன் என்று
என்னை ஒருபோதும் ஒதிகியதில்லை நீ!
என் காலில் நான் நிற்க கற்று தந்தவள் நீ!
மனம் உடைந்து மயங்கும் வேளயில்
மயில் இறகாய் என் மனம் வருடியவள் நீ!
நீ மட்டும் இல்லை என்றால்
என் பயணம் உன் கருவர்யில் தான் என்பதில் ஐயம் இல்லை என் அம்மா....
இன்று நான் இருக்கும் கோபுரத்திற்கு அஸ்திவாரம்
நீ தான் அம்மா....