பனிச் சருகு
காற்று உன் திசையில்
வரும் போது மட்டும்
குனிந்து செல்வதேன் பெண்ணே ?
தன்னுள் வாசம் கூட்டவா
இல்லை
தன் வழியை தொலைக்கவா?
நேற்று உன்னைப் பார்த்த சூரியன்
இரவே நிலவாகி போனது
தெரிந்த போனதாலா ?
முன் நாள் பொழிந்த
மழைத்துளி உன் மேல் பட்டு
பனிச் சருகாய் உருண்டு
திரிவதை கண்டு விட்டதாலா ?
இல்லாமால் இருக்குமா ?
எனக்கே உன்னைப் பார்த்த பின்புதான்
நேற்று வரை கும்பிட்ட
குல தெய்வம் கூட
ஆணா பெண்ணா என்ற
சந்தேகம் வருகிறது .