மின்னல் கீற்றால் ஆழிப்பேரலை

மின்னல்கீற்றாய் எனிமையினுள் மின்மினியாய் உள்நுழைந்த என்னவள்
என்னுடைய சிந்தை என்னும் கருமேகக் கூட்டத்தினை
பொன்னானஆசை என்னும்காற்றால் படிப்படியாய் மெதுவாய் தள்ளிவிட்டு
அன்புக்காதல் என்னும்சாரலை அந்தியில்நல்ல மழையாய் பொழிய
தன்னிச்சையான வழிவகையைத் தருவித்தாள் வறட்சியானஎன் இருதயத்தில்
இருதயங் கனக்க இன்பக்காதல் மாரிமழை வலுக்க
பெருவெள்ளமாய் காமமானது பெருக்கெடுத்து கரைபுரண் டோடியது
அருமையாய் பரிமளித்த அன்பினில்ஊடல் என்னுமொரு துளிப்பொறி
பொருக்குவெடியாய் வெடித்தால் பெரிதாய்விரிசல் விட்டது இதயமடை
பொருந்தாதிது என்றவள் பொருத்தமாய் கூறிப்பெற்றாள் பிரியாவிடை
பிரியாவிடை பெற்றக்கணம் பிரிவுநில நடுக்கமாயெனை ஆட்கொள்ள
விரிவானதொரு ஆழிப்பேரலை விழிவழியே எனைதடுத்தாட் கொண்டது
தெரிவான எங்கைகள் தெரிந்த விழிநீரினை துடைத்திட்டாலுமே
பரிவானவள் அவள்போல் பாசங்காட்ட ஆகுமோஎன் றெண்ணிஎண்ணி
நீரில்காகிதமாய் மிதக்கிறேன் நினைவுகளைச் சுமந்தபடி வாழ்வில்