இழப்பு

பண்பாடு
நாகரிகம்
கலாச்சாரம்
மொழி
இனம்
மண்
மரபு
வீரம்
நெறி
நீதி
அரசியல்
என எல்லாவற்றையும்
இழந்துவிட்டு
ஏதிலிகளாக வாழ்கிறோம்;
தேசியம் பேசும் தேசியவாதிகளோ
ஈன்றத்தாயின் நெஞ்சில்
ஏறிநின்றுகொண்டு
தேசத்தாயின் தேசியக்கொடியை
உயர்த்திப் பிடிக்கிறார்கள்.


O எமதர்மன்.

எழுதியவர் : எமதர்மன் (9-Aug-15, 1:04 pm)
Tanglish : ezhappu
பார்வை : 142

மேலே