மச்சம் – பல அரிய தகவல்கள்

சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு ஒரு வழி முறை வைத்திருக் கிறார்கள்.

இதை இப்ப டித்தான் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கு சாஸ்திர, சம்பிரதாயம் என்று வைத்திருக்கின்றனர். ஆய கலைகள் 64&ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக்கலை ஒரு மரம் போன்றது. அதில் இரு ந்து பல சாஸ்திரங்கள் பல்வேறு கிளைக ளாக பிரிந்துள்ளன. அதன் ஒரு கிளையாக விளங்குவது அங்கலட்சண சாஸ்திரம்.

நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோ ன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம் காலமாக நடை முறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும் பாலான பலன்கள் ஒத்துப் போவதை நடைமுறையில் காண்கிறோம். சில ருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறி ப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். இந்த பல ன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரவல்லது.

ஆண்களுக்கான மச்சபலன்

புருவங்களுக்கு மத்தியில் & நீண்ட ஆயுள்
நெற்றியின் வலது புறம் & தனயோகம்
வலது புருவம் & மனைவியால் யோகம்
வலது பொட்டு(நெற்றி) & திடீர் அதிர் ஷ்டம்
வலது கண் & நண்பர்களால் உயர்வு
வலது கண் வெண்படலம் & புகழ், ஆன் மீக நாட்டம்
இடது புருவம் & ஏற்ற, இறக்கம், செல வாளி
மூக்கின் மேல் & சுகபோக வாழ்க்கை
மூக்கின் வலதுபுறம் & நினைத்ததை அடை யும் அம்சம்
மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி & ஆவணம், கர்வம், பொறாமை
மேல், கீழ் உதடுகள் & அலட்சியம், காதல் வயப்படுதல்
மேவாய் (உதடுகளுக்கு மேல்) & செல்வாக்கு, இசை, கலைத் துறையில் நாட்டம்
வலது கன்னம் & வசீகரம், தயாள குணம்
இடது கன்னம் & ஏற்றத்தாழ்வு
வலது காது நுனி & சில கண்டங்கள் வர லாம்
இடது காது நுனி & தகாத சேர்க்கை, அவ மானம்
காதுகளின் உள்ளே & பேச்சாற்றல், திடீர் யோகம்
தொண்டை & திருமணத்துக்கு பிறகு யோகம்
கழுத்தின் வலதுபுறம் & சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
இடது மார்பு & ஆண் குழந்தைகள் அதி கம், பெண்களால் விரும்பப் படுவார்
வலது மார்பு & பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
வயிறு & பொறாமை குணம், தகு திக்கு மீறிய ஆசை
அடிவயிறு & திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை
புட்டம் & அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு

பெண்களுக்கான மச்ச பலன்

நெற்றி நடுவே & புகழ், பதவி, அந்தஸ்து
நெற்றி வலதுபுறம் & தைரியம், பணிவு இல்லாத போக்கு
நெற்றி இடதுபுறம் & அற்ப குணம், டென்ஷன், முன்கோபி
மூக்கின் மேல் & செயல்திறன், பொறுமை சாலி
மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண் களால் அவமானம்
மூக்கின் நுனி & வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள் & ஒழுக்கம், உயர்ந்த குணம்
மேல் வாய் பகுதி & அமைதி, அன்பான கணவர்
இடது கன்னம் & வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு
வலது கன்னம் & படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை
வலது கழுத்து & பிள்ளைகளால் யோகம்
நாக்கு & வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் & கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
இடது தோள் & சொத்து சேர்க்கை, தயாள குணம்
தலை & பேராசை, பொறாமை குணம்
தொப்புளுக்கு மேல் & யோகமான வாழ்க்கை
தொப்புளுக்கு கீழ் & மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்
தொப்புள் & ஆடம்பரம், படாடோபம்
வயிறு & நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
அடிவயிறு & ராஜயோக அம்சம், உயர்பதவிகள்
இடது தொடை & தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்
வலது தொடை & ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை
புட்டங்கள் & சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை.

மச்சம் பற்றிய மேலும் பல அரிய தகவல்கள்

கை ரேகையில் பெண்களுக்கு இடது கை, ஆண்களுக்கு வலது கை என்பது போல மச்சங்களிலும் உண்டா?
ஆம், மச்சங்களுக்கும் இது பொருந்தும். பெண்களுக்கு இடது கையில் இருக்கும் மச்சத்தினால் அதிக பாதி ப்பும், ஆண்களுக்கு வலது கையில் இருக்கும் மச்சத்தினால் அதிக பாதி ப்பும் ஏற்படும்.

முகத்தில் பொதுவாக மச்சம் இல் லாமல் இருப்பது நல்லது என்று மச்ச சாஸ்திரம் கூறுகி றது. பொதுவாக உதடு, கண், புருவம், இமைகளுக்கு மேலே மச்சம் இருக்கக் கூடாது என்று கூறுகிறது.

நெற்றிக்கு மேலே தலையில் எல்லாம் மச்சம் இருக்கலாம். ஆனா ல் முன் தலையில் இருப்பதை விட, பின் தலையில் இருக்க லாம்.
சிலருக்கு கருப்பையும், பச்சையை யும் கலந்த மச்சங்கள் இரு க்கும். அது பொதுவாக உடல் பகுதியில் உண்டா கும். அதுபோன்ற மச்சங்கள் உடலின் பின்பகுதியில் ஏற்படுவது நல்லது.

என் தாத்தா சில ஜாதகங்களைப் பார் த்ததும் இந்த பெண்ணுக்கு நாகதோ ஷம் இருக்கிறது என்பார். அந்த பெற் றோர்கள் இல்லையே, எந்த தோஷமும் இல்லை என்று சொன்னார்களே என்று கூறுவார்கள். அதற்கு, முட்டியில் இருந்து தொடைக்கு இடைப் பட்ட பகுதியில் பச்சையும், கருப்பும் கலந்த நிறத்தில் பாம்பு படம்எடுத்தது போன்ற ஒரு மச்சம் இருக்குமே என்று சொல் வார்கள். அவர்களிடம் கேட்டால் அது உண்மையாக இருக்கும்.

லக்னாதிபதியுடன் ராகு சேர்ந்தாலோ சந்திர னுடன் ராகு சேர்ந் தாலோ, பூர்வ புண்ணியாதி பதியுடன் ராகு சேர்ந்தாலோ இதெ ல்லாம் ஏற்படும்.

பொதுவாக கிரகங்களில் பார்த்தால் ராகு, கேதுதான் மச்சங்களை வெளிப்படுத்தும் கிரகங்கள். அடுத்ததாக செவ்வாயை சொல்லலாம். செவ்வாய் ரத்தத்தை வெளிப்படுத்தும் கிரகம்.

செவ்வாய் நீச்சமாகி, ராகு கேதுவுடன் சேர்ந்து சனியின் பார்வை பெற்றாலே உடல் எங்கும் மச்சமாக – அகோரமாக காட்சி அளிப் பார்கள் என்று ஜோதிட அலங்கார நூல் சொல்கிறது. ஒரு உயரிய பதவியில் வகிப்பவருக்கு அதுபோன்ற நிலை உள்ளது.

பெண், ஆண் உறுப்புகளில் மச்சங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி இருந்தால், விரும்பி விபச்சாரத்தில் ஈடுபடுவது, விபச்சார விடுதிகளுக்குச் செல்வது போன்ற குணங்கள் இருக்கும்.

வாழவந்த பெண்ணிற்கு வலது பக்கம் மச்சம், ஏறு பிடிக்கிற மச்சானுக்கு இடது பக்கம் மச்சம் என்று ஒரு பழமொழி இருக்கிறது.
பொதுவாக ஆண்களுக்கு இடது பக்கம் மச்சம் இருப்பது அதிர்ஷ்டத்தின் வெளிப்பாடு என்று நூல்கள் சொல்கின்றன. பெண்க ளுக்கு வலது பக்கம் மச்சம் இருப்பதும் நல்லது.

அதேபோல நெஞ்சுப் பகுதியில் மச்சம் இருந்தால் கொஞ்சம் சுகவா சியாக இருப்பார்கள் என்று சொல்லலாம். பொதுவாக பின்புறம் இருக்கும் மச்சத்தால் திடீர் பணப்புழக்கம், அதிர்ஷ்மாகவும் இருப்பார்கள் என்று சொல்வார்கள்.

பொதுவாக கால்களில் மச்சம் இருப்பவர்களுக்கு காலில் சக்கரம் என்று சொல்வார்கள். ஒரு சிலர் உட்கார்ந்து கொண்டே காலை ஆட்டிக் கொண்டே இருப் பார்கள். அது உள்ளங் காலில் இருக்கும் மச்சத்தின் காரணமாகத்தான் இருக்கும். ஏனெனில் உள்ளங்காலில் இருக்கும் மச்சம் ஒரு அசை வைக்கொடுத்துக் கொண்டே இருக்கும். ஓடிக் கொண்டே இருப்பார்கள்.

மான் போன்று மச்சம், மீன் போன்று மச்சம் என்பதெல்லாம் உண்மையா?

உண்மைதான். எந்த நட்சத்திரக் கூறில் ராகு, கேது, செவ்வாய் எல்லாம் அமைந்திருக்கிறதோ அதன் அடிப்படையில் மச்சத்தின் வடிவம் வேறு படும். மச்சம் என்றால் மீன் என்றும் ஒரு அர்த்தம் உண்டு.

மீனைப் போன்று இருக்கும் மச்சம் எல்லாம் விசேஷம். உள்ளங்க¨யில் எல்லாம் மச்ச ரேகை கூட உருவாகும். மச்ச ரேகை உண்டானால் மன்னனாகக் கூட ஆவார்கள்.

மீனைப் போன்ற மச்சம் அதிர்ஷ்டத்தின் வெளிப் பாடு. இப்போ தெல்லாம் அது அரிதாகிவிட்டது.

நெல்லிக்காய் போல, மாவடு போல எல்லாம் மச்சம் உண்டு. உலகத்தில் எங்கோ ஒருவர் இது போன்ற மச்சங்கள் கொண்டிருப்பர்.

பிறப்பில் காணப்படும் மச்சம்

இது ஆங்கிலத்தில் மோல்/ நீவஸ் என அழைக்கப்படும். தற்போது செய்யப்பட் டுள்ள ஆய்வுகளின் பிரகாரம் இந்த மச் சங்கள் பொதுவாக ஒருவரது ஆயுளில் முதல் 20வருடங்களில் ஏற்படுகின்றன. உலகில் 100 குழந்தைகளில் ஒரு குழ ந்தை இதனால் பாதிக்கப்படு கிறது. இவை பாதகமற்ற அதீத கல வளர்ச்சியா ல் ஏற்படுகின்றன. எனினும் பிறக்கும் போது காண ப்படும் சில மச்சங்கள் பிற் காலத்தில் மெலனோமா எனப்படும் தோல் புற்றுநோய் உருவாகக்காரணமா கின்றன.

இந்த மச்சங்கள் தோலின் கீழான அல்லது தோலின் மெற்பரப்பில் நிறப்பொருட்களால் நிறம் ஊட்டப்பட்டு காணப்படலாம். பெரும்பாலானவை மெலனினை உற்பத்தி செய்யும் மெலனோசைட்டுக்கள் எனப்படும் கலங்களால் ஏற்படுகின்றன. மெலனின் நிரப்பொருள் ஆனது இவற்றுக்கு கருமை நிறத்தை வழங்குகிறது.

இவற்றில் பல வகைகள் உள்ளன. அவை பின் வருமாறு

தோலின் மேற்படைக்கும் அடியில் இருக்கும் இழையத்துக்கும் இடையில் காணப்படும் மச்சம் – இது தட்டையாகவும் கறுப்பு அல்லது மண்ணிறமாகவும் காணப் படும்.

கூட்டு மச்சம் – இது தோலின் மேற்பரப்பு முதல் இழையம் வரை காணப்படும். இது சற்று உயர்ந்து காணப்படுவதுடன் கறுப்பு அல் லது மண்ணிறமாகக் காணப்படும். தோலின் கீழான இழையத்தில் மாத்திரம் காணப்படும் மச்சங்கள் சற்று உயர்ந்தும் தசையின் நிறமாகவும் காணப்படும்

நீலமச்சம் – இது தோலின் மிக ஆழமான படையில் உள்ளதுடன் மெல னோசைட்டுகள் காரணமாக நீல நிறத்தைப் பெறுகிறது.

இராட்சத உருவமான மச்சம் – இவை பெரிய நிறமூட்டப்பட்ட உரோ மங்களைக் கொண்ட மச்சமாகும்.

மேலணியின் உள்ளே காணப்படும் மச்சம் – இது வாய் மற்றும் இலிங்க உறுப்புக்களில் காணப்படும். வாயில் பொ துவா க அண்ண த்தில் காணப்படும்

பிறப்பு முதலான மச்சம் – இது பிறப்பின் போது அல்லது அதனை அண்மித்து சிறிய அல்லது பெரிய அளவில் காணப்படும். சிறிய மச்சங்கள் மெலனோமா புற்று நோ யை உருவாக்கக் கூடிய ஆபத்து குறைந் தளவு உள்ளவை. எனினும் இவற்றின் அளவு அதிகரிக்கும் போது புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு அதிகமாகும்.

மொங்கொலியன் புள்ளி – இது ஆசியாக் கண்ட குழந்தைகளில் உடலில் பிறப்பு முதல் கானப்படும் ஆழமான நீல நிற தோல் மாற்றங்களாகும்.

இவை உடலின் மரபணுக்களால் தீர்மானிக்கப்படும். சூரிய ஒளியில் அதிக காலம் இருத்தல் அதிக அளவு மச்சங்கள் உருவாகக் காரணம்ஆகும். அத்துடன் தோல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பும் அதிகரிக்கும்

இந்த மச்சங்கள் சந்தேகத்திற் கிடமான வையாக காணப்படின் உடனடியாக தோல் மருத்துவர் ஒருவரை அணுக வேண் டும். அத்துடன் சில வேளைகளில் இவை அழுத்தல்,நூல் மூலம் வெட்டுதல், அல்லது உருக்குதல் முறை மூலம் அகற்றப்படலாம்.

ஜோதிடர்களின் பார்வையில் மச்சம்ட

ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் எதிர்காலத்தை எப்படி அறிவது? பிறந்த தேதி விவரமிருந்தால் கம்ப்யூட்டரில் ஒரு நொடியில் கணித்துவிடலாம். அது தெரியாதவர்கள் என்ன செய்ய ? இங்கேதான் மச்சங்களுக்கு முக்கியத்துவம் ஏற்படுகிறது. அதிலும்
பலான இடத்தில் மச்சம் என்றால் அதற்கு விசேஷ பலன் உண்டு. அதுஎன்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் எதிர்காலத்தை அறிய பற்பல வழி முறைகள் உள்ளன. ( நாடி ஜோசியத்தை நான் நம்புவதில்லை. நம்மிடமே விஷயம் வரவழைத்து எவ்வித இலக்கண விதி களும் பொருந்தாத பாட்டில் பலன் தருகிறார்கள். எவரேனும் தமிழாசிரியரிடம் கொடுத்து பாருங்கள். தளை கிளை எதுவுமே பொருந்தாது)

ஜாதகம் இல்லாதோர், பிறந்த தேதி இத்யாதி தெரியாதோர் தம் எதிர்காலத்தை அறிய என்ன தான் செய்வது?

“எனக்கு ஜாதகமே இல்லிங்கோவ்” என்று துள் ளி குதிக்காதீர்கள். மெடிக்கல் ரிப்போர்ட் காணாமல் போன மாத்திரத்தில் வியாதிகள் காணாம ல் போவதில்லை அல்லவா?

சரி ஜாதகமில்லாதோர் எதிர்காலமறிய உள்ள வழி முறைகளில் சில வற்றை டச் செய்து ஒரு விஷயத்தை பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

1.திருமணமானவராய் இருந்தால்:

திருமணமானவராய் இருந்தால் , மனைவிக்கு ஜாதகம் இருந்தால் அதை வைத்து தம் எதிர்காலத்தை அறியலாம். உங்கள் குடும்ப ஜோதிடரிடமோ (அ) என்னிடமோ தங்கள் மனவியாரின் ஜாதகத்தை கொடுத்து ” சாமீ .. நமக்கு ஜாதகமில்லே. இது சம்சாரம் ஜாதகம் . ஏழாமிடத்தை ஸ்கேன் பண்ணி ரெண்டு வார்த்தை சொல்லுங்க ” என்றால் போதும். நாங்கள் தங்கள் மனைவியாரின் 7 ஆமிடத்தை லக்னமாக கொண்டு தங்கள் எதிர்காலத்தை சொல்லலாம்.

தர்க பூர்வமானது தானா?

கிராமத்து பக்கம் பையனுக்கோ ,பெண்ணு க்கோ வரன் அமையாத பட்சம் ” ஹும் இனி இவனுக்குனு/இவளுக்குனு பிறந்து வர வா போறாள்/ன் ” என்பார்கள். இது 100 சதம் நிச்சயம். (சிலர் விஷயத்தில் மட்டும் இப்படிபிறந்து வருவதும் உண்டு. உம். ஈ. வெ.ரா பெரியார். மணியம்மை)

கிராமத்தில் “தாயைப்போல் பிள்ளை நூ லை போல் சேலை ” என்று சொல்லி வந் தார்கள். இப்போ ஜெனட்டிக் எஞ்சினீரிங் என்று கூறுகிறார்கள் அவ்ளதான் வித்யா சம்.

இப்போ நம்ம மீன் துள்ளியானை உதாரணமா எடுத்துக்குவம்.. ( மீன் துள் ளியான்! தப்பா நினைக்க மாடிங்கதானே?) இவருக்கு மனைவியா வர ப்போறவங்க (வந்துட்டாங்களா?) இவரோட ஏழாவது இடத்தை பொருத் துதான் இருப்பாங்க. அதே மாதிரி அவிக ஜாதகத்துல ஏழாமிடத்தை பொருத்துதான் இவர் இருப்பார்.
1989 முதல் கணவன் மனவியர் ஜாதகங்க ளை ஆராய்ந்ததில் இது சரிதான் என்று தோ ன்றுகிறது

திருமணமாகாதவிக:

அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சி, அண்ணன் தம்பி இப்படி யாரோட ஜாதகத்தையாவது (இருந்தா) வச்சி தங்கள் எதிர்காலத்தை தெரி ஞ்சுக்கலாம். என்ன ஒரு வித்யாசம்னா அப்பா ஜாதகத்தை வச்சி பார்க்கும்போது 9 ஆம் இடத்தை லக்னமா கொள்ளனும், அம்மா ஜாதகம் னா 4 ஆமிடம், அக்கா, அண்ணன் ஜாதகம்னா 11 ஆமிடம், தம்பி தங் கச்சி ஜாதகம்னா 3 ஆமிடத்தை லக்னமா வச்சி பலன் தெரிஞ்சுக்கனும்

யாருக்குமே ஜாதகமில்லன்னா?

அதுக்கும் ஒரு வழி இருக்கு .ஜோசிய ர்கிட்டே எப்போ போகனும்னு முன் கூட்டி ப்ளான் பண்ணாம, அவர்கிட்ட யும் ப்ரியர் அப்பாயிண்ட்மென்ட் வாங் காம, திடீர்னு போங்க. ” சாமி !/ அய் யரே! ஆரூட சக்கரம் போட் டுப்பாருங்க”னு கேளுங்க. அதை வச்சி சொன்னாலும் ஒர்க் அவுட் ஆகுது. அதுலயும் இதுவரை ஜோஸ்யரையேபார்க்காதவங்க விசயத்துல ரொ ம்ப நல்லாவே ஒர்க் அவுட் ஆகுது.

வெளியூர் ஜோசியர்ட்ட தபால் மூலம் பலன் கேட்கும்போது நீங்க எம்.ஓ அனுப்பற நேரம், செக்கை போஸ்ட் பண்ற நேர த்தை கடிதத்துல குறிப்பிட்டும் பலன் கேட்கலாம்.

ஆரூடத்துல நம்பிக்கையில்லேன்னா?

1 1/2 (ஒன்னரை) வருசத்துக்கு மேல வசிக்கிற வீட்டை வச்சே உங்க எதிர்காலத்தை தெரிஞ்சுக்கலாம். அதுக்கு ஒரு நல்ல வாஸ்து நிபுணர் தேவை. என்னை பொருத்தவரை ஒரு குழந்தை பிறக்கும் போதே அது என்ன மாதிரி வீட்டில் வசி க்கனும்னு முடிவு செய்யப்பட்டுருது. அதன் ஜாதகத்தில் எந்த கிரகம் பலகீனமடைஞ்சி ருக்கோ அந்த கிரகத்துக்குரிய திசைல பிர ச்சினை இருக்கிற வீட்லதான் வசிக்குது. அதை ரிசால்வ் பண்ணிட்டா அந்த வீட்டை யே காலி பண்ணிட்டு போற மாதிரி ஆயிருது.

மூச்சை கவனிங்க:

சில நேரம் உடனடியா முடிவெடுக்க வேண்டிய சந்தர்ப்பமிருக்கும். அப்ப ஜோசியரை தேடிக்கிட்டு இருக்க முடியாதில்லயா. அப்போ உங்க மூச்சை கவனிங்க

ஆண்கள்:
சுவாசம் வலது மூக்குதுவாரம் வழியா நடந் துக்கிட்டிருந்தா அந்த காரியத்தை செய்ங்க. இல்லாட்டி அம்பேல் தான்

பெண்கள்:
சுவாசம் இடது மூக்குதுவாரம் வழியா நட ந்துக்கிட்டிருந்தா அந்த காரியத்தை செய்ங் க. இல்லாட்டி அம்பேல் தான்

அங்கத்துடிப்புகள்:

மனிதனின் அறிவு 100 சதம் பொல்யூட்டட். ( நம்ம கல்வி அமைப்பும் , ஆசிரிய பெரும க்களும் அப்படி இருக்காங்க. சீட்டு நடத்தாத, ரியல் எஸ்டேட் பண்ணாத அரசு ஆசிரியர் உங்க ஊர்ல இருந்தா நீங்க புண்ணியம் பண்ணவுக) மன மும் பொல்யூட்டட் தான் ( எங்க பையன் ரொம்ப ஷை டைப், எங்க பொண்ணு பயந்த சுபாவம் இப்படி உங்க மனதை பெற்றோர் தான் வடி வமைக்கிறாங்க)

ஆனால் மனித உடல் மட்டும் இயற்கையோடு இடையறாத தொடர்பு கொண்டிருக்கிறது. என் னதான் நாம் உடைகளால் மூடி, வேண்டாத ரோமங்களை மழித்து, தலைமுடியை, நகங்க ளை வெட்டி, கண்ட டால்கம் பவுடர், க்ரீம், போட்டாலும், கண்ட வேளையில் உண்டு க ண்ட வேளையில் கழிந்து , ஜங்க் ஃபுட், ஃபா ஸ்ட் ஃபுட், நூடுல்ஸ் திணித்து இம்சை செய் தாலும் தூய இயற்கை சக்தி நம் உடலை வழி நடத்திக்கொண்டுதான் இருக்கிறது.

பாவம் ! மனித உடல் அப்பாவி. அது இன்னமும் தன்னை இயற்கையில் ஒரு பாகமாகவே கருதுகிறது. பயாலஜிக்கல் க்ளாக் இன்னமும் வேலை செய்துகொண்டுதானிருக்கிறது. சூரியன் உதி த்தபோது கண்விழித்து, சூரியன் ஆஸ்தமித்ததும் படுக்கைக்கு போனா லே போதும் மனித உடல் இன்னமும் உன்னதமாக இயற்கையுடன் தொடர்புறும். சரி அதை விடுங்க.

“அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு” கிரகங்களின் சஞ்சாரம் அண்டை வெளியில் மட்டும் நடக்கவில்லை. இங்கே மனித உடலி லும் தான் நடக்கிறது.

நம் அறிவுதான் சூரியன். நம் மனம்தான் சந்தி ரன். ராசிச்சக்கரத்தை நிமிர்த்தி வைத்தால் மேஷம் தான் நம் தலை, ரிஷபம் தான் தொண்டை, வாய், கண், மிதுனம் தான் காது, புஜம் . இப்படி யாக மீனம் நம் பாதத்தை காட்டுகிறது.

இது பொது விதி. உங்களை பொருத்தவரை உங் கள் லக்னம் தான் தலை. லக்னம் முதல் எண் ணும்போது 12 ஆவது பாவம் தான் பாதங்களை காட்டும். ராகு, கேதுக்களின் இருப்பை வைத்து மச்சங்களை கூட சொல் லலாம். (எட்டாமிடம்தான் மர்மஸ்தானம். இங்கு ராகு கேதுக்கள் இருந் தால் “அங்கே” மச்சமிருக்கும். அத னால் தான் “அங்கே ” மச்சமிருந் தால் தரித்திரம் என்று கூறுகிறார் கள்.
ஆக மனித உடலுக்கும், இயற்கை க்கும் தொடர்பிருக்கிறது என்பதை ஓரளவு புரிந்திருப்பீர்கள் என்று நம் புகிறேன். கலெக்டிவ் அன் கான் ஷியஸ் மைண்ட் என்று ஒரு கான் செப்ட் இருக்கிறது. அதாவது நம் அடிமனதில் ஒட்டு மொத்தமாக நமக்கு ( ஓம்கார் ஸ்வாமிகள் முதற்கொண்டு இந்த அப்ஷ்டு வரை) என்ன நடக்க போகிறது என்பது பதிவாகியிருக்குமாம்.

நாம் தான் நம் மனதையே கண்டு கொள்வ தில்லையே. அடிமனதை எங்கே கண்டு கொ ள்ளபோகிறோம். ஆனால் நம் உடல் ? அது அண்ட சராசர பிரபஞ்சங்களையும் கண்டு கொள்கிறது. ரேடியோ ரிசீவர் தனமாய் செய் திகளை கிரகித்துக்கொள்கிறது. அந்த செய் தியை அங்க துடிப்புகளின் மூலம் நமக்கும் சொல்ல முயற்சிக்கிறது.

ஜாதகம் இல்லாதவர்கள் இந்த துடிப்புகளின் மூலம் தம் எதிர்காலத்தை அறிந்து நடக்கலாம்.

ஆண்கள்:
வலது பாகம் துடித்தால் சுபம்
இடது பாகம் துடித்தால் அசுபம்

பெண்கள்:
இடது பாகம் துடித்தால் சுபம்
வலது பாகம் துடித்தால் அசுபம்

அர்த நாரீஸ்வர தத்துவம்:
பிரதி ஆணிலும் பெண்மை, பிரதி பெண்ணிலும் ஆண்மையும் இருப்பதையே நம்மவர்கள் அர்தநாரீ ஸ்வர தத்துவமாக வைத் தார்கள்.

எழுதியவர் : செல்வமணி - (வலையில் படித்த (31-Aug-15, 7:43 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 965

மேலே