இவ்வுலகம் மிகப் பெரிது

2011 ல் புதுக் கவிதை

எனக்கு துயர் வந்த பொழுது
உன் தேவதைகளில் ஒருவரை
அனுப்பி ஆறுதல் அளித்தாய்;

என் துன்பத்தை சொல்ல
ஒருவரைத் தேடினேன்,
நீ உன் காதுகள் இரண்டையும்
காட்டிச் செவி மடுத்தாய்;

எனக்குக் குளிரெடுத்த பொழுது
உன்னிரு கரங்களால் என்னை நீ
அணைத்துக் கொண்டாய்;

நான் இருளில் வழி தவறிய பொழுது
ஒளி தந்து, என்னை நீ
வழி நடத்தினாய்;

நீ என் கைகளைப் பிடித்துக் கொள்,
நான் எதற்கும் அஞ்ச மாட்டேன்!
நீ எப்பொழுதும் என்னை விட்டுவிட மாட்டாய்,
என் இறைவா!

இவ்வுலகம் மிகப் பெரிது,
எனவே, நீ எனக்காகத்
தீர்மானித்த வழியில் செல்ல
நான் முயற்சிப்பேன்;

நீ தீர்மானித்த வழி
மலை முகட்டிற்கே சென்றாலும்
நன்மையே நடக்கும் என்பதை
நான் அறிவேன்;

"கீழே நான் வீழ்ந்தாலும்
என்னை நீ உன் கரங்களில்
தாங்கிக் கொள்வாய்"

(அல்லது)

"கீழே விழாமல் பறப்பதற்கு
கற்றுத் தருவாய்"
என நான் அறிவேன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Sep-15, 4:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 261

மேலே