பெண் பாவம்

யார் செய்த பாவம்..?

பெண்களின் மணவாழ்க்கை மட்டுமே
அடிக்கடி
ஒத்தி வைக்கப்படுகின்றன

வருகின்ற வரன்களின்
வரதட்சனைப் பிரேரனையில்
இவர்களின் வாழ்க்கை மட்டும்
நம்பிக்கையில்லாத் தீர்மானங்களாய்
அடிக்கடி தள்ளுபடி நிராகரிப்பு

மணவறையில்
தாலி ஏறும்போது மட்டுமே
மங்கல மந்திரங்கள்
உச்சரிக்கப்படும்

அதற்குப் பின்பு...

பாக்கி வைத்த
வரதட்சனைக்காய்
அர்ச்சனைகள்
அர்ச்சிக்கப் படும்.
அதன் இம்சைகள்
தற்கொலைக்குத் தள்ளும்..

தட்சனைக் கணக்குகள்
தடங்கலின்றி வந்த பிறகே
தாலி கட்டிய தார்மீக உறவு
நிரந்தரப் படுத்தப் படும்..
அதுவும்
அடுத்த பண்டிகை வரும் வரை மட்டுமே..

பெண்ணை வருத்தி
வரதட்சனை வாங்கும் போது
உனக்குத் தெரியாது அதன் வலியும் வேதனையும்
உனக்கொரு பெண் பிறந்து
அந்தத் துன்பத்தை
நீ அனுபவிக்கும் வரை....

எழுதியவர் : க.அர.இராசேந்திரன். (6-Sep-15, 4:15 pm)
Tanglish : pen paavam
பார்வை : 667

மேலே