நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது

நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...

க, ச, ட, த, ப, ற – ஆறும் வல்லினம்.,
ங, ஞ, ண, ந, ம, ன – ஆறும் மெல்லினம்.,
ய, ர, ல, வ, ழ, ள – ஆறும் இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.

தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெய் எழுத்துக்கள்த் தேர்ந்தெடுத்தனர்.
அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன், உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி…
த் + அ = 'த' வாகவும்,
ம் + இ = 'மி' யாகவும்,
ழ் + உ = ‘ழு’ வாகவும்
என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தை நீக்கி தமிழ் என்று அழைத்தனர்.

மொழியில் தான் அளவற்ற நுணுக்கங்கள் என்றால், பெயரில் கூடவா..?!?!?!?!

அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே.!
தமிழ் என்பது பார்த்து பார்த்து செதுகபட்டுள்ள மொழி.!!
வாழ்க தமிழ்.!!, வெல்க தமிழ்.!!



____________________________________________________
பி.கு:
(வலைத்தளத்தில் படித்தது : மாற்று கருத்து இருப்பின் அறிய விழைகிறோம். கருத்தில் தவறு இருந்தாலும் பிழை பொறுத்தருள வேண்டுகிறோம்.)

எழுதியவர் : செல்வமணி - படித்தது பகிர்ந (8-Sep-15, 12:43 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 788

மேலே