என்றும் பசுமரத்தாணியே
முண்டாசுக் கட்டி
முறுக்கு மீசை வைத்து
முறைப்பான பார்வைக்கொண்டு
முற்போக்காய் நடந்தவரே
பராசக்தி பாட்டெழுதி
பரவசம் கொண்டவரே
சிந்து நதியினிலே
சந்திரன் ஒளியினிலே
சமத்துவக் கனவு கண்டு
சந்தங்கள் இசைத்தவரே
தீர்க்க தரிசியே
தீப்பிழம்பே
எங்களுக்குள்
நீ
என்றும் பசுமரத்தாணியே!