P RAMESH - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : P RAMESH |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 03-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 71 |
புள்ளி | : 7 |
பிடிச் சோறு உண்ண
மடித் தந்த பூமியை
அடிப் போட்டுப் பிரித்து
பொடிப்பொடியாய்
விற்ற பின்
மாடியில் தோட்டமா
மானிடா. . . ?
இது
மடமையா . . . ?
மறுமலர்ச்சியா . . . ?
அருகம் புல்லெடுத்து
அழகழகாய் அலங்கரித்து
வெள்ளெருக்குப் பூப்பரித்து
வெள்ளிமணி மாலையிட்டு
கொழுக்கட்டைப் பூரணத்தோடு
கொய்யாக் கனியும் வச்சி
சுண்டலோடு பொரியும் வச்சி
சுடச்சுட சோளக்கருதும் வச்சி
முந்தி விநாயகனே
தொந்தி கணபதியே
துதிப்பாடி வேண்டுகிறேன்
அருள்பாவி மூத்தவனே . . .!
முண்டாசுக் கட்டி
முறுக்கு மீசை வைத்து
முறைப்பான பார்வைக்கொண்டு
முற்போக்காய் நடந்தவரே
பராசக்தி பாட்டெழுதி
பரவசம் கொண்டவரே
சிந்து நதியினிலே
சந்திரன் ஒளியினிலே
சமத்துவக் கனவு கண்டு
சந்தங்கள் இசைத்தவரே
தீர்க்க தரிசியே
தீப்பிழம்பே
எங்களுக்குள்
நீ
என்றும் பசுமரத்தாணியே!
தனியொரு மனிதனுக்கு
உணவில்லாத் தரணியைத்
தகர்த்திட விதித்தவனே
தரங்கெட்டப் பரங்கியரைத்
தனலாய்த் தகித்து
தலைத்தெரிக்கச் செய்தவனே
சாதிகள் இல்லா உலகத்தை
சாதிக்கத் துடித்தவனே
காக்கை , குருவிகளோடு
கைக்கோர்த்துக் குழைந்தவனே
பாப்பாவுக்கும் பாட்டுச்சொல்லி
பாசத்தைத் தந்தவனே
கண்ணனுக்கு பாயமைத்து
பண்ணிசைத்தப் பாவேந்தனே
காளிக்குத் தூளிப்பாடி
ஊளியொழித்தவனே
பார்ப்போற்றும் பாவலனே
பாரதியே நின்
பாதம் பணிந்தோம்
நண்பர்கள் (9)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

மணி மேகநாதன்
சேலம்

சேர்ந்தை பாபுத
சேர்ந்தகோட்டை( இராமநாதபு

RATHNA
தூண் & துரும்பு
