உணர்வுகளில் உருவான காதல்

இமைகள் இணைய மறுக்கையில்
மயில் இறகாய் விழி வருடும் உன் ஸ்பரிசமும்
துயிலின் நடுவில் திடுக்கிடும் போது
துணையாகும் உன் சுவாசத்தின்
உஷ்ணமும்
தொலைவில் நீ இருந்தாலும்
என் நினைவில்
தினம் கிடைகின்றது உயிரே .
நிமிஷங்கள் நகர்ந்து
வருசங்கள் ஆனபோதும்
நெஞ்சுக்குள் இன்னும் இனிக்கின்றது
முதல் சந்திப்பின் மௌனம் .
என்னை
பித்துப்பிடிக்க வைத்து -உன் பின்னே அலையவைத்த கனங்கள்
கடந்த காலம் என்பதை மறந்துவிடுகின்றது நிகழ்காலம் .
விரல்பிடித்து நடப்பதாய் கற்பனை
செய்து
விடிந்ததை மறந்த நாட்கள் .
வேதனை மறக்கவென
என் கனவில் நீ
தலைகோதி தோள்சாய்த்த இரவுகள்
அதிசயம்
உணர்வுகளில் மட்டும் உருவான
காதல்
உயிர் வாழ்கின்றது உலகில் ...!!!