வயிற்றினில் குழந்தை உதைக்குது, பாரு

குறும்புக்கு பேரே குழந்தையப்பா,

பிறக்கும் முன்னே குறும்பு காட்டுதப்பா,
பிறந்து வளர்ந்துவிட்டால் குறும்பு தப்பா?

அம்மா ஏன் அந்தக்குறும்பை தாங்கி கொள்கிறாள்,
அது பழக்கமாகி விட்டதாலோ?
அது ஏன்,

அப்பாவுக்கு மட்டும் தப்பா தெரியுதப்பா,
அப்பத்தான் கோபமே வருகுதப்பா?
பள்ளிக்கூடத்திலையும் புள்ளைங்களை
அடிக்காம பார்த்துக்குங்களேயப்பா!

எழுதியவர் : செல்வமணி (22-Sep-15, 11:00 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 100

மேலே