யாரடா நீ

யாரடா நீ!!!!
சிங்கத்தின் சிகை கொண்டவனே..
ஓரக் கண்ணால் ஒளிந்து பார்க்காமல்
நேர்பார்வையால் நெத்தியில் அடிப்பவனே....
நாணம் கொண்டென் பெண்மை
நாபி மறைக்கையில்
நாட்டம் கொள்ளாதவனே...
குளக்கரையில் குளிக்கையில்
கொப்பளிக்கும் முன்னழகை
வெட்கப்பட்டே பதுங்க வைப்பவனே....
மிதிவண்டியில் தொடர்கையில்
முண்டியடித்து விரல்களை
மணியடிக்க வைப்பவனே....
கண்ணாடியைத் தழுவிக்
காதல் கவிதைகள்
கதைக்க கவிழ்த்தவனே....
பாவடை தாவணியையும்
பாவலனாய்த் தேடி
கோவலனாய் வலைய விட்டவனே....
எந்தச் சாயமுமில்லாமல்
என் அதரங்களில் எழிலாய்
ஏழு வர்ணங்களை எழுதுபவனே....
யாரடா நீ!!!!