நஞ்சப்பன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நஞ்சப்பன்
இடம்:  துருசாம்பாளையம்
பிறந்த தேதி :  10-Nov-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Jun-2013
பார்த்தவர்கள்:  522
புள்ளி:  138

என்னைப் பற்றி...

இலக்கியத் தாய் மடி தேடும் இன்னுமொரு குழந்தை

என் படைப்புகள்
நஞ்சப்பன் செய்திகள்
நஞ்சப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2017 4:08 pm

எழுத வேண்டுகிறாய்
எழுத்தைத் தீண்டுகிறாய்
துளிர வேண்டுகிறாய்
துளிரைத் தூண்டுகிறாய்

காவல் மீறுகிறாய்
காதல் ஊற்றுகிறாய்
காலம் சுழற்றுகிறாய்
கதவிடை பிதற்றுகிறாய்

கம்பன் தேடுகிறாய்
காவியம் வேண்டுகிறாய்
கவனாய் துரத்துகிறாய்
காமனை மிரட்டுகிறாய்

ஓவியம் காட்டுகிறாய்
ஓடையாய் உடைகிறாய்
மேவியே அலைகிறாய்
மேனியை கலைகிறாய்

சாவியை தருகிறாய்
சடுதியில் குலைகிறாய்
சாகசம் புரிகிறாய்
சந்தியில் பிரிகிறாய்

கடைக்கண் ஒளி தாளாமல்
கம்பன் கனிந்து விட்டேன்

இயந்துந்தன் கதை எழுத
இமயமாய் எழுந்துவிட்டேன்

சந்திரன் சரிந்து விழ
இந்திரன் இடிந்து வி

மேலும்

நஞ்சப்பன் - காளியப்பன் எசேக்கியல் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Oct-2015 2:12 pm


ஐயமும் திரிபும் நீங்க , அறிஞரின் நூல்கள் வாங்கு!
பொய்யினைப் புரட்டிப் போட்டுப், புதுமைகள் படைத்துக் காட்டு!
செய்யெனச் செய்தி  டாமல், சிந்தித்துச் செயல்கள்  ஆற்று!
கைவரும் நலன்கள் கொண்டு கடனெனச் சமூகம் வாழ்த்து!

மேலும்

நன்றி ஐயா. முடிந்தவரை தமிழ் காக்கும் முயற்சி தொடரும். வாழ்க வளமுடன் 19-Oct-2015 8:51 am
'யூதர்கள் தம் இனத்தைப் பேணுவதைச் சொன்னார் ஐயா, ஆனால் நம்மவர் மற்ற இடத்திற்க்குச் சென்றால் அவர்களாக மாறுவதைத்தான் பெருமையாகக் கொள்கிறார்கள் இது மாற வேண்டும். பொருளாதாரதிர்க்காகத்தான் நாம் வேறு இடத்தில் இருக்கிறோம் தேவை பொருள் மட்டும்தான் கலாசாரம் இல்லை அது மற்றவர்க்கு அள்ளி வழங்கும் அளவிற்கு நம்மிடம் கொட்டிக் கிடக்கிறது என்று ஒவ்வொரு தமிழனும் அறிந்து சூளுரைக்க வேண்டும்.'-----அருமையாக அதே சமயம் தெளிவாகக் கூறியுள்ளாய் -மீமணி! 19-Oct-2015 7:00 am
தமிழ் அன்பன் படைப்புக்கு நான் அன்றும் இன்றும் என்றும் அடிமை. தமிழ் அன்பன் படைப்புகள் நம் வீட்டிலும் நூலகங்களிலும் சென்றடைய ஆவன செய்வோம் தமிழ் அன்னை வாழ்த்துகள் நன்றி 19-Oct-2015 5:20 am
தங்கள் படைப்புக்கு நன்றி நூல்கள் வாங்க ஆவன செய்வோம் படித்து பயன் பெறுவோம்.பலருடன் பகிர்ந்து கொள்வோம் நன்றி 19-Oct-2015 5:16 am
நஞ்சப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Oct-2015 7:56 pm

நான்கு வயது
நங்கை!!!??? சீரழிப்பு....

முதலமைச்சர் நாற்காலியிலும்
ஒரு நங்கை.....

--------------------------------------------------------

விதை வாங்க முடியாமல்
விவசாயி தற்கொலை....

ஆயிரம் கோடி ஏய்த்தும்
சுகமாகச் சுற்றும் முதலைகள்...
---------------------------------------------------------

படித்தவனுக்கு இப்பொழுதெல்லாம்
பிச்சையெடுக்கும் வேலையுமில்லை...

அரசு இந்த ஆண்டும்
அறுபது கல்லூரிக்கு அனுமதி....
-----------------------------------------------------

தலைவனின் படத்திற்கு
குடம் குடமாய் பாலாபிஷேகம்..

பசியில்வாடும் குழந்தைக்குப்
பால் இல்லை ...
--------------------

மேலும்

நஞ்சப்பன் - நிலாகண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2015 12:07 am

அழகான பொருள் என்று
எல்லோரும் ஓடிவந்து வாங்க
நீ அதைவிட அழகாய்
மூச்சுவாங்கிக்கொண்டிருந்தாய்.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ அழத்துவங்கினாய்
நானோ ஒரு ஓவியம் குலைவதை
பார்க்கத் தயாரானேன்.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ படுத்திருக்கிறாய்
உன்னையே
ஒரு புல்லாங்குழலாய்
வாசிக்கத் தோன்றியது எனக்கு.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
உள்ளங்கை நீட்டி
சத்தியமா.? என்கிறாய் நீ.!
உன் உள்ளங்கை தொடவே
சத்தியம் செய்கிறேன் நான்.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இத்தனை வரு

மேலும்

மலரில் தேன் வைத்த படைப்பை உன் முகத்தில் இதழ் வைத்து முடித்திருந்தான் இறைவன்.! அழகான கற்பனை தோழா..!!! 09-Dec-2015 3:36 pm
நன்றி நண்பரே 26-Oct-2015 4:43 pm
அருமையான படைப்பு காதலியின் அழகை கவிதையில் சொல்லி இருப்பது இன்னும் அழகே....... 20-Oct-2015 12:21 pm
நான் அவள் இல்லை..வித்யாசமாக இருக்கிறது. மிக்க நன்றி நண்பரே 19-Oct-2015 7:28 pm
நிலாகண்ணன் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Sep-2015 12:07 am

குடத்தில் நீர்
சுமந்து போகிறாய்..
உன்
இடுப்பேறிய குளம்
இன்பத்தில் ததும்புகிறது.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ
நேற்றுக்குடையின்றி
நனைந்த தெருவில்
இன்று காளான் பூத்திருக்கிறது.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
உன்னிடம்
கேள்வி கேட்கும் ஆசிரியர்கள்
கிளி ஜோசியக்காரனை
நினைவூட்டுகிறார்கள்.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
பூக்கடையில்
பேரம் பேசுகிறாயே..
நீயும் ஒரு பூதானே.?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ உன் வீட்டு மாடியில்
நின்று பட்டம் வ

மேலும்

அழகு ,,,,,மிக அழகு....வாழ்த்துக்கள் 08-Feb-2016 6:18 am
மிக்க நன்றி நண்பரே 26-Oct-2015 7:55 am
மிக்க நன்றி நண்பரே 26-Oct-2015 7:55 am
பூக்கடையில் பேரம் பேசும் பூ ? மென்மையான ...மேன்மையான...வரிகள் 21-Oct-2015 1:31 pm
நஞ்சப்பன் - நஞ்சப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Oct-2015 8:42 pm

ரோஜாக்கள் நிறம்மாறுகின்றன
பரிணாமத்தாலல்ல
பாவையிவள் ஆழ் மௌனத்தால்....

தேன்சிட்டுக்கள் கூடியழுகின்றன
வலியாலல்ல
வஞ்சியவள் சோக ஒலியால்....

மாம்பூக்களும் மடிந்து விழுகின்றன..
மயக்கத்தாலல்ல
மங்கையவள் தேக உரக்கத்தால்....

மழைமேகங்களும் விழுந்துமறைகின்றன
மழையாலல்ல
மாதவள் தேக வலியால்.....

அன்னம் மனம்
அலைய விட்ட
மன்னன் எங்கே??

பேதையின் நெஞ்சு
நோகயில் கொஞ்ச
விரைந்து வாடா காதல்
மருந்து தாடா....

மேலும்

வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா 14-Oct-2015 3:57 pm
மருந்து விரைந்து வரும். நோகயில் அல்ல நோகையில் வாழ்த்துக்கள் 14-Oct-2015 2:31 pm
நஞ்சப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2015 8:42 pm

ரோஜாக்கள் நிறம்மாறுகின்றன
பரிணாமத்தாலல்ல
பாவையிவள் ஆழ் மௌனத்தால்....

தேன்சிட்டுக்கள் கூடியழுகின்றன
வலியாலல்ல
வஞ்சியவள் சோக ஒலியால்....

மாம்பூக்களும் மடிந்து விழுகின்றன..
மயக்கத்தாலல்ல
மங்கையவள் தேக உரக்கத்தால்....

மழைமேகங்களும் விழுந்துமறைகின்றன
மழையாலல்ல
மாதவள் தேக வலியால்.....

அன்னம் மனம்
அலைய விட்ட
மன்னன் எங்கே??

பேதையின் நெஞ்சு
நோகயில் கொஞ்ச
விரைந்து வாடா காதல்
மருந்து தாடா....

மேலும்

வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா 14-Oct-2015 3:57 pm
மருந்து விரைந்து வரும். நோகயில் அல்ல நோகையில் வாழ்த்துக்கள் 14-Oct-2015 2:31 pm
நஞ்சப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Oct-2015 7:52 pm

முட்செடிகள் குத்துவதை விட
முதல் இதயம் விலகுவதும்....

வேல்கம்பு குத்துவதை விட
வேண்டியவர்கள் தவிர்ப்பதும்....

கல்லடி படுவதை விட
கனவு வீணாக்கப்படுவதும்.....

அமிலம் அரிப்பதைவிட
அம்மையப்பனை பிரிவதும்.....

தூக்கிலிடப்படுவதை விட
துணையை இழப்பதும்...

நாசமாக்கப் படுவதை விட
நட்பு நழுவுவதும்....

அமிர்தம் உண்டும்
அழியும் உடலாகிறது...

மேலும்

நஞ்சப்பன் - நஞ்சப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Sep-2015 11:32 pm

அவள் தேவி
அவன் தேவன்
அவர் தேவதேவி
பல மனதில்.....

அவள் அழகி
அவன் அழகன்
அது அசிங்கம்
அதே மனதில்.....

அர்த்தநாரீஸ்வரர்
அதிரடி சிகண்டி
கற்றதும் இவரே
போற்றுவோரும் இவரே ....

பிள்ளை வேண்டி
தொல்லை தாங்கி
பெற்றதும் இவரே
தூற்றுவோரும் இவரே....

பெற்றதும் நினைக்கல
கற்றதும் நினைக்கல
சவமென சடுதியில்
சுடு நெருப்பிடுகையில்.....

அன்புத் தந்தை
அழகுத் தாய்
பெற்ற பிள்ளை
பேரழகுக் கிள்ளை.....

பித்து ஹார்மோனால்
சித்தம் தடுமாறி
சக்தி சிவனாக
சிவன் சக்தியாக.....

பெத்த மனமும்
கொத்தும் கழுகும்
சித்த நேரம்
சேர்ந்து விடுது....

மன்மதன் இரதி
மாறித் தோன்ற

மேலும்

வருத்தமான உண்மை நட்பே. வரவுக்கும் வாசிப்புக்கும் நன்றி..... 24-Sep-2015 4:15 pm
இந்தியாவில் மட்டும்தான் மூன்றாம் பாலினத்தவர் எள்ளி நகையாடப் படுகின்றனர் இவ்வளவு கேவலமாக. ஒரு மினிமம் கியாரண்டி அளவிற்க்காகவாவது அவர்களை அங்கீகரிக்கலாம் .... சாதி... பெண்ணடிமை... இதைனைப் போன்ற பிரச்சினைகளுக்கு ஈடாக இதுவும்... மாற்றம் தேவையாயிருக்கிறது. கொண்டுவர முயற்ச்சிக்கிறது கவிதை 24-Sep-2015 4:01 pm
வரவுக்கும் வாசிப்புக்கும் நன்றி நட்பே ...... 24-Sep-2015 3:14 pm
நல்லதொரு கருத்து !! வாழ்த்துக்கள் !! 24-Sep-2015 9:19 am
நஞ்சப்பன் - நஞ்சப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Sep-2015 4:09 pm

சொட்டும் குழாய் நீர்
தட்டும் கை ஓசை
சுட்டும் புரிவதில்லை இரு
பட்டம் இயற்கைக் காப்பில்
கெட்ட விதையாய் முளைக்காமல்
மட்ட மதிப்பெண்களுக்காய் பெறுவதினால்.....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (27)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்

இவர் பின்தொடர்பவர்கள் (27)

இவரை பின்தொடர்பவர்கள் (27)

சத்யா

சத்யா

panrutti
agan

agan

Puthucherry
மேலே