இவளும் எழுதுகோலும் --கயல்விழி
![](https://eluthu.com/images/loading.gif)
இருளை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருந்த மின்விளக்கின் அடியில்
அமைதியாய் தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தது
தினக்குறிப்பேடு .
உதிரம் எனும் மை தோய்ந்த சில காகித துண்டுகள்
கற்பழிக்கப்பட்ட கன்னிகளை போல
கசக்கி வீசப்பட்டிருந்தன குப்பைத்தொட்டிக்குள் .
சுவாசிக்கத் திணறிய
மின்விசிறியின் கடைசி ஆசையை சொல்ல முடியாமல் இறுகிப்போனது டக் டக் ஓசையுடன் .
அறையின் மூலையில் ஆங்காங்கே
அரண்மனை அமைத்து
அரசாட்சி செய்தது கரையான்கள் .
அழையா விருந்தாளியாய்
அடிக்கடி வந்து போனது மின்மினிகள் .
விழிகள் வேண்டிக்கொண்டது
இமைகள் இரண்டும் இன்றாவது
இணைதல்
இன்பமென்று .
எதையும் நோக்காத இவளின் உணர்வுகளுக்கு
உதிரத்தால் உயிர்கொடுத்துகொண்டிருந்தது
எழுதுகோல் .!!