என்ன ஆச்சு whats up குழந்தை அழுதது

என்ன ஆச்சு ?(what's up?) குழந்தை அழுதது !

பத்து மாதம் சுமந்து
பெற்றெடுத்த பெண் மகவைப்
பக்கத்திலே படுக்கவைத்து
தாய் அவளும் உறங்குகிறாள் .
பசியெடுத்த மழலையுமே
பால் கேட்டுக் குரல் எழுப்ப
பாவம்,அவள் காதில்
விழுந்து அவள் விழிக்கவில்லை.

அப்போது

தலைமாட்டில் வைத்திருக்கும்
அலைபேசி குரல் எழுப்பி
'என்ன ஆச்சு' செய்தியொன்று
வந்ததையே அறிவிக்க
வாரிச் சுருட்டிக் கொண்டு
விழித்ததனைப் படிக்கின்றாள்!

எழுதியவர் : ரமேஷ்(கனித்தோட்டம்) (18-Oct-15, 3:52 pm)
பார்வை : 184

மேலே