ரகசியம்

கட்டறுக்கும்
வார்த்தைகளுக்கு
கடிவாளமிடும்
இந்திர ஜாலம்!!

தெரியாத‌
விடைகளுக்கான‌
சினேகபூர்வ‌
சின்னம்!!

உலக காதல்_
தோல்விகளின்
ஒட்டுமொத்த‌
ரகசிய அழுகை!!

ஊமைகளின்
வேதனை
உணர்ந்த‌
வேதாந்தம்!

என்னை
எனக்கே
அறிமுகப்படுத்தும்
தியானமண்டபம்!!

முத்தங்கள்
பெறத்தெரிந்த‌
முற்போக்கு
சிந்தனையாளன்!!

அறிவாளியாய்
காட்டிக்கொள்ளும்
முட்டாளின்
அஸ்திரம்!!

அறிவாளியின்
நினைவுகளை
சலவைசெய்யும்
நீள் நதி!!

ப்ரியமான‌
கோபத்தில்
போட்டுக்கொண்ட‌
வேடம்!!

ரசனையில்
ஒட்டிக்கொண்ட‌
ஓர் வகை
மரணம்!!

என் உனதான!!
நிபந்தனையற்ற‌
நினைவுகளின்
புத்தக அறை!!

இப்படித்தான்
வகுத்துக்கொள்ள‌
முடிந்தது!!
உலக மெளனத்தை!!

ஏவாளின் முதல்
முத்த சுவையாகவே
உன் மெளன ரகசியம்!!
அறிய முடியாததாய்....

எழுதியவர் : புலவூரான் ரிஷி (19-Oct-15, 8:48 pm)
பார்வை : 425

மேலே