வாழ்க்கை பயணம்

தேயாத நிலவொன்றைத் தேடி..
வாட்டாத வெயில் ஒன்றை நாடி..
வாடாத மலர் ஒன்றை தேடி..
அலையில்லா அமைதியை நாடி..
ஆத்மார்த்த அன்பினை தேடி..
நம்பிக்கை நங்கூரம் ஏந்தி
தொடர்கிறேன் என் வாழ்க்கை பயணத்தை..
தூரத்தில் தெரியும் ஒளியை பார்த்தபடி..

எழுதியவர் : தீபாகுமரேசன் (28-Oct-15, 12:20 pm)
Tanglish : vaazhkkai payanam
பார்வை : 666

மேலே