குடைமேல் கவிதை

#nylon_பூவே ☔

என்றோ பரணில் தொலைந்த
உன்னை தேடிப் பிடித்து....
மெல்ல உந்தன் இதழ் தட்டி !
செல்லம் கொஞ்ச இடை தட்டி !

பனியில் அயர்ந்தது போதுமடி - இது
பணியில் அமரும் நேரமடி !
இனியும் துவண்டு உறங்கினால் - என்னை
வருணன் நனைக்க நேருமடி !

மழை இசைக்கும் தாளத்தை
பிழை இன்றி கேட்டு
பா விரைந்து எழுதவே #குடை
பூ விரிந்து எழுகவே !!!

பருவ மழை.......!

எழுதியவர் : முரா கணபதி (28-Oct-15, 2:09 pm)
பார்வை : 538

மேலே