மீண்டும் மீண்டும்
மீண்டும் வேண்டும் எனக்கு வேண்டும் சுயநலமில்லாத உள்ளங்கள் வேண்டும்
மீண்டும் நான் மழலையாக என் அன்னையின் மடியில் தவழ்ந்திட வேண்டும்
கள்ளம் இல்லா உள்ளம் கொண்ட மழலைகள் போல் மனிதர்கள் வேண்டும்
பூக்கள் போல எல்லோரும் புன்னகையால் தினம் பூத்திட வேண்டும்
நட்புக்கு நான் என்று அன்பு நண்பர்களின் வாழ்த்தொலி வேண்டும்
துன்பத்தையும் இன்பமாக்கும் நல்ல நல்ல நினைவுகள் வேண்டும்
சாதிகள் இரண்டு உள்ள சமுதாயம் மட்டும் தான் வேண்டும்.
பொய்மை அறியாத பொன் மனங்கள் வேண்டும்
உதவிகள் செயும் நல் உறவுகள் வேண்டும்.
வலிகளின்றி வாழ்ந்திட நான் தனி இதயம் இன்றி பிறந்திட வேண்டும்
இவையனைத்தும் நடக்கும் என்றால்
மறுபடி மறுபடி நான் பிறந்திட வேண்டும்.
நான் ஒவ்வொரு முறையும் பிறந்திடும் போதும் என் சுவாசக் காற்றாய் என் நட்புக்கள் வேண்டும் ........
மீண்டும் மீண்டும் அவர்களே என் இதயமாக என்னோடே வாழ்த்திட வேண்டும்