துவக்கம்
அசைவின்றி பிறக்கும் குழந்தைகளை,
அடித்து அழ வைக்கிறார்கள் முதன்முதலில்,
அன்று தொடங்கியது இன்றும் தொடர்கிறது,
தொடர்ச்சியாய் மனதிலும் உயிரிலும் மறவாது,
எவராவது அடித்தபடியேதான் இருக்கிறார்கள்,
நானும் அழுதபடியேதான் தவிக்கிறேன்............