நூலின் பெயர்- திரைச் சுவடுகள் நூலாசிரியர்- கவிஞர் இரா இரவி நூல் மதிப்புரை- கவிஞர் மா கணேஷ்

நூலின் பெயர்:- *திரைச் சுவடுகள்.*

நூலாசிரியர்:- *கவிஞர் இரா. இரவி.*

நூல் மதிப்புரை:- *கவிஞர் மா. கணேஷ்.*

வெளியீடு வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாகராயர் நகர் .சென்னை .600017. email
தொலைபேசி எண்கள் 044 - 2432810. 24310769 பக்கங்கள் 178
விலை 160 ரூபாய் .

தமிழ்ச் செம்மல் மதுரை மண்ணின் மைந்தர் ஹைக்கூ திலகம் கவிஞர் இரா. இரவி ஐயாவின் நூல்கள் என்றுமே ஒரு தனித்துவத்தைப் பெற்று இருப்பது தனித்துவமே...
ஐயாவின் கவிதை நூல்களின் வரிசையில் ஒரு புதிய பரிமாணமாக உருவெடுத்து உருவாகியுள்ளது திரைச் சுவடுகள் என்னும் இந்நூல். இதுவரை ஒரு கவிஞனாக அறியப்பட்டவர் ஆகச் சிறந்த திரைப்பட விமர்சகராக அறிந்ததை எண்ணி மிக்க வியப்பு அடைகிறேன் மனம் மகிழ்ச்சி அடைகிறேன். நூலுக்கு ஐயா இட்ட பெயர் நனிபொருத்தம் ஏனென்றால் தன்னுடைய ஞாபகச் சுவடுகளை நன்கு பதித்துள்ளார். ஒரு படம் பார்த்து அரங்கை விட்டு வெளியே வந்ததும் அதை மறந்து விடுவது எல்லோருக்குமான இயல்பான ஒரு விடயம். ஆனால் நூலாசிரியரான ஐயா அத்திரைப்படங்களின் பாத்திரங்களின் பெயர்களையும் அப்படத்திற்காக உழைத்த அனைவரையும் நினைவில் வைத்து எழுதி உள்ளது. மிகவும் வியப்பாகவும் அதே சமயம் ஆச்சரியமாகவும் உள்ளது. மேலும் நிறைகளை நிறைவாகவும் குறைகளை குத்திட்டு சொல்லாமல் சுட்டிட்டு சொல்லிய விதம் சிறப்பு. மேலும் நூலிற்கு அணிந்துரை வழங்கிய இனமுரசு சத்தியராஜ் ஐயா மற்றும் திரைச்சுவடுகள் எழுப்பும் என் மன உரை - மனசின் குரல் என்று எழுதியுள்ள பேரா. மு. இராமசுவாமி ஐயா மற்றும் தங்களுடைய என்னுரை ஆகியவை நனிநன்று வாழ்த்துகள். நூலின் உள்ளே 55 தலைப்புகளில் பல்வேறு படங்களின் விமர்சனங்களை தந்து இருப்பதும் இறுதியில் பாலுமகேந்திரா அவர்களுக்கு கவிதை வடித்திருப்பதும் சிறப்பாக உள்ளது. அட்டைப் படங்கள் வழக்கம் போல் தனித்துவம். நூலினை படிக்கின்ற போது ஒரு திரையரங்களில் அத்திரைப்படத்தினை பார்ப்பது போன்ற உணர்வை உண்மையாகவே வெளிப்படுத்துகிறது. இவற்றில் நான் பார்க்காத திரைப்படங்களை தங்கள் விமர்சனத்தை படிக்க படிக்க அப்படத்தினை அலைபேசியில் பார்த்தேன். ஒரு படைப்பாளியின் வெற்றி என்பது தன் படைப்பை படிப்பவரை படைப்பாளியாக மாற்றுவது தான் அந்த விதத்தில் பார்த்தால் இன்று என்னையும் ஒரு படைப்பாளியாக மாற்றியது ஐயாவின் நூல்கள் என்பதை மிகவும் பெருமையுடன் இங்கு பதிவு செய்கின்றேன்.
வெள்ளைத்திரையில் கண்டதை
மனத் திரையில் காட்டியது
திரைச் சுவடுகள்..!
திரையரங்கு
திரையாகவே இருந்தது
திரைச் சுவடுகள்..!
கவிஞரின்
ஞானச் சுவடுகள்
திரைச் சுவடுகள்..!
கவிஞரின்
ஞாபகச் சுவடுகள்
திரைச் சுவடுகள்..!
தரணி புகழ்
தன்னிகரில்லா நூலாய்
திரைச் சுவடுகள்..!
மிகவும் சிறப்பான சிற்பமாக செதுக்கிய சிற்பி கவிஞர் இரா. இரவி ஐயாவிற்கு வாழ்த்துகள்...
நன்றி...!
*கவிஞர் மா. கணேஷ்,*
*கொன்னையூர்.*

--

.

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (5-Jun-25, 6:59 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 26

மேலே