முத்தொள்ளாயிரம் - சேரன் 4 - நேரிசை வெண்பா
முத்தொள்ளாயிரம்
சேரன்
நேரிசை வெண்பா
கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில்
அடைத்தாள் தனிக்கதவம் அன்னை – அடைக்குமேல்
ஆயிழையாய் என்னை அவன்மேல் எடுத்துரைப்பார்
வாயும் அடைக்குமோ தான்! 4
பொருளுரை:
சேரமன்னன் கோதை கடல் போன்ற படைசூழ ஊர்வலம் வருகிறான். ஆயிழைத் தோழியே! அவனைக் கண்ணாரக் காணவொட்டாமல் தாய் கதவை அடைத்துத் தாளிட்டிருக்கிறாள். ஆயின், அவனோடு என்னைச் சேர்த்துப் பேசும் ஊரார் வாயை அவளால் அடைக்க முடியுமா?