வா வா என் தேவதையே

கண்ணுக்குத் தெரியாத
எதோ ஒன்று
உனக்கும் எனக்குமிடையில்
ஓடிகொண்டிருக்கிறது. ..
நீ எத்தனை தூரத்தில்
இருந்தாலும்
அது உன் இதயத் துடிப்பை
என் செவியில் ஒலிபரப்புகிறது. ..
நினைவுகளின் தளும்பலில்
விளிம்பு வழிந்து நனையும் என்னை
துவட்டிவிட வா. ..
என் தேவதையே!