வெற்றிக் கோப்பை
வேர்வை சிந்தி வாங்கிய
*வெற்றிக் கோப்பை* யில்
சந்தோஷத்தை நிறைக்க
நினைத்தோம்...
ஆனால்....
துரதிஷ்டமாக துயரங்களும்
அதில் கலந்து விட்டது.
விளையாட்டு வினையானது என்பது
இது தானோ?
வெற்றி விழா கொண்டாடும் போது
விவேகமும் தேவை என்பதை
உணர்த்திய பெங்களூரு சம்பவம்
மனதைவருத்தம் கொள்ளச் செய்கிறது
வருங்காலத்தில் சிந்தித்து செயல்படுவோம்
உயிர் துறந்த
விளையாட்டு ரசிகர்களுக்கும்
அவரது குடும்பத்திற்கும்
*ஆழ்ந்த அனுதாபங்கள்*
--கோவை சுபா