என் அழகு கவிதையே

உனை கண்ட போதெல்லாம்
என்னுள் என்ன நிகழ்ந்தது
என தெரியவில்லை
என் மனமோ அறியவில்லை

என் மைத்தூவலோ இடைவெளியல்லாது
தன் கை வண்ணத்தை காண்பிக்க
ஆரம்பித்தது கவிதையாக

என் கவிதையாக நீ இருப்பாய் என
எப்பொழுதும் நான் அறிந்திருக்கவில்லை
அறிந்திருந்தால் முப்பொழுதும் உன்னுடனே இருந்திருப்பேன்
காலேமெல்லாம் காத்திருப்பேன் உன் வருகைக்காக
எப்பொழுதும் கவிதை படைக்க

கவிதைகளின் வார்த்தைகளாய் மட்டும் இல்லை நீ
என் கவிதைக்கும் உயிருண்டு
என உன் கண்களில் கண்டுகொண்டேன்

ஒவ்வோர் எழுத்தும் குதூகலமாக மட்டற்ற
மகிழ்ச்சியில் திளைத்து ஆட என் கவிதைகளோ
புத்துயிர் பெற்றனவே உனை கண்டு

கவிதைகளை தாங்கும் காகிதமும்
சொர்க்கம் சென்றதே உன் அழகை பாடியதால்
உன்னிரு கண்களின் கருமையை அடைத்து
என் மைத்தூவளின் உதவியுடன் படைத்த
கவிதைகளை உனக்காக பரிசளிப்பேன் என்றென்றும்

பரிசாக அளிப்பதற்கு என் கவிதையொன்றும்
வெறும் எழுத்துக்களின் கோர்ப்பு இல்லை
என் உயிரின் உயிரான உன் அழகிய மனதின்
வரம் என் கவிதையடி..

எழுதியவர் : சதீஷ் குமார் (13-Nov-15, 8:39 pm)
Tanglish : en alagu kavithaiye
பார்வை : 142

மேலே