நிறமின்றி ஒழுகும் இரவு

மகரந்த பொதிகளில்
உலகவுயிர்த்துளியை
நிறைத்த வேகத்தில்!

உயிரிகளின் உறக்கதில்
கனவு நிறுவன
கதவுதிறந்த களைப்பில்!

யவ்வனத்தில் ஒழுகிய‌
முனகல்களில்
முங்கிய மூச்சிறைப்பில்!

தூங்காத செவிகளில்
கடிகார முள்நகர்வையும்
ஒப்பித்த களிப்பில்!

குடிசை கூரையை
பெயர்த்தடுக்க_காற்றை
பெற்றெடுத்த வலியில்!

எவரெவெரோ பிரிவில்
சுரப்பிலிருந்த கண்ணீர்
சுவைத்த நிறைவில்!

இரவுக்கு
வியர்த்திருக்கிறது!
வியர்வை பனித்துளி

இரவு
அழுதுமிருக்கிறது!
அழுகை பனித்துளி

கோவிலுண்டியலை
அநாதையில்லத்திற்கு
திருடியவனுக்காக‌
மாத்திரமே
இரவு அழுதிருக்கிறது

அழுகை பனித்துளி

எழுதியவர் : புலவூரான் ரிஷி (18-Nov-15, 1:15 am)
பார்வை : 106

மேலே