தன்னம்பிக்கை
இளைஞனே !!
விழித்து கொள் !
வாசிக்க ஆளில்லாமல்
வானப்புத்தகம்
விரித்து
வைக்கப்பட்டுள்ளது!
நீ மட்டும் ஏன்
இன்னும் சோகக்கடலில் .............
வாழ்க்கை உன்னை பூமிக்கு
அனுப்பும் போது கை நிறைய பூக்கள்.
இப்போது மட்டும் என்ன கை நிறைய
சவப்பெட்டி ஆணிகளா ?
வீழ்ந்து விடுவதல்ல தோல்வி!
வீழ்ந்தே கிடப்பது தான் தோல்வி.
தட்டிவிடு
உன்னில் ஒட்டிய தூசுகளை......
வெட்டிவிடு
உன்னை முட்டிய நினைவுகளை...
இமயம் இன்னும்
இடிந்துவிடவில்லை!
குமரி இன்னும்
குறுகி விடவில்லை!!
உன் கண்களில் உதித்து வரும்
சிவப்பு சூரியனை உலகில் வளம் வர வை!
தொடர்ந்து வரும் அம்மாவசைகளை
உதிப்பதற்கு முன் அஸ்தமனமாக்குவோம்!!
வாளேந்தும் கைகளெல்லாம் இனி
தூரிகையை எந்தட்டும்..
புது விடியலை ஏந்துவதற்காக !!!!