தானாய் மாறும்

கண்களில் வேறுபாடு இல்லை என்றதும் சேர்ந்த காதல் …
கருத்தில் வேறுபாடு வந்ததும் பிரிகிறது காதல் …
உள்ளத்தில் வேறுபாடு இல்லையென்றதும் சேர்ந்த காதல் …
உலகத்தில் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து பிரிந்தது காதல் …
காதலை நம்பி கையை கோர்க்கும் காதலர்களே
உங்கள் கருத்தை காதலுடன் சேர்க்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் …
கருத்து வேற்றுமை காதலில் சேர்வதில்லை …
சேர்ந்த காதல் கருத்து வேற்றுமையில் பிரிவது நியாயம் இல்லை ..
கருத்தை முன் வைத்து உன் காதலை பின் தள்ளாதே …
கருத்து என்று வேண்டுமானாலும் மாறும் என்பதை மறந்து விடாதே …
காதல் என்று மாறாது என்பதை நினைவில் இருந்து எடுத்துவிடாதே …
கருத்தால் இரு உள்ளம் பிரிந்தால் அது காதல் இல்லை …

இரு இதயத்திற்கு இரு கருத்து இருக்கலாம் …
இரு இதயத்திற்கு இரு காதல் இருக்கமுடியாது …
இரு இதயத்தை ஒன்று என நினைக்கும் நீங்கள் …
இக்கருத்தை ஒன்றாக நினைக்க முயற்சி செய்யுங்கள்; …
காதலில் வெற்றியை முன் வையுங்கள் ..
மற்றவை தானாய் மாறும் என் நம்புங்கள் ..

எழுதியவர் : சாமுவேல் (26-Dec-15, 7:36 am)
பார்வை : 85

மேலே