கரியமாலீஸ்வரர் அந்தாதி -- - - ஏழாம் பத்து - - முயற்சிக் கவிதை - - - சக்கரைவாசன்

கரியமாலீஸ்வரர் அந்தாதி - - ( ஏழாம் பத்து )
************************************************************************
மாயமானைப் பின்தொடர்ந்து மனையாளைத் தொலைத்திட்ட
மாயவனாம் ராமனுக்கு அருள் இட்ட கரியமாலி -- இவன்
காயம் உற்ற காயங்கள் காயலையே என் அப்பா - உன்
சேயாம் இவன் காயம் ஆற்றுவது உன்கடனே !

உன்கடன் தீர்வதற்க்காய் இப்புவியில் வந்துற்ற
என்கடன் தீர்வதற்கு வழியொன்றும் காணேனே
வன்தொண்டன் தனையேற்ற வன்மீகா கரியமாலி
உன்தொண்டன் கடன் தீர்த்து காத்திடுவாய் ஏழைதனை !

ஏழ்மையில் இருந்தாலும் கோழையாய் இவனில்லை
கீழ்மையோ மேன்மையோ விதிப்பது நீயன்றோ
தாழ்மையாய் வேண்டினேன் கரியமாலி உன்னிடமே -- உன்
ஊழியன் இவனையும் நிறுத்தாதே கட்டத்தில் !

கட்டத்தில் இருந்தாலும் கூட்டத்தில் ஒருவனாய்
மட்டற்ற மகிழ்வோடு அடித்தொண்டு ஆற்றிடுவேன்
அட்டமா புயமேற்ற அரியவனே கரியமாலி
கட்டமோ உன்தனக்கு இவனிட்டம் நிறைவேற்ற !

நிறைந்த மனர்க்குவியை லிங்கமாய் பாவித்து
முறையாய் பூசைஇட்ட சண்டேசன் உன்னருகில்
இறைவா கரியமாலி உனக்கே நான் ஆளானேன்
பாறையோ இன்னும் நீ எப்போது கனி ஆவாய் !

கனிந்தமுக மண்டலமே பணிவோற்கு எளியோனே
முனிகட்கு ஆல்நிழலில் நல்லறம் பகர்ந்தவனே
காணி நிலம் இவன்வேண்டான் கரியமாலி நீயிருக்க --இவன்
பணி தொடர அனுமதிப்பாய் ஈசனே இடை மருதா !

மருதநிலப் புலிதேசம் முழுவதும் ஆட்கொண்டு
எருதேறி உமையுடனே உலாவரும் எழிலோனே
எருக்கம் பூங்கொன்றை முடியேற்ற கரியமாலி -நல்
இறுக்கியே அணைத்துவிடு இவனை நீ ஒதுக்காது !

காதினிற் குழையாட கால்கொண்ட கழலாட
மாதுளைக் கனியாளை நல் சேர்ந்து நடம் ஆடும்
தாதுநீர் கங்கைதனை சடையிட்ட கரியமாலி
சாதுவாம் இவனுக்கு இன்னமும் சோதனையோ !

சோதித்து சோதித்து என் கண்டாய் என்னவனே
பாதிக்கும் மேலேயாம் பாதித்த முயல்வனகள்
வாதிக்க நேரமில்லை ஆனைக்கா கரியமாலி -- இவன்
சாதிக்கும் வழியொன்றை காட்டிவிடு நஞ்சுண்டா !

நஞ்சடைந்த கண்டனே கஞ்சனூர்ப் பெரியோனே
குஞ்சரத் தோலாடை அணிந்திட்ட கரியமாலி
அஞ்செழுத்து நெஞ்செழுதி நாதாஉனை கெஞ்சிடுவேன்--இவன்
அஞ்சாது கரை சேர கடல் நீரின் தோணி ஆவாய் !

- - - ( எட்டாம் பத்து தொடரும் ) ---

எழுதியவர் : சக்கரைவாசன் (30-Dec-15, 2:00 pm)
பார்வை : 85

மேலே