நாளெல்லாம் நீ திங்கள்

நாளெல்லாம் நீதிங்கள் வான்நீலம் உன்நயனம்
புன்னகைப் புத்தகம் உன்விரியும் செவ்விதழ்
கண்கள் கவிந்திட அந்தி அதிசயம்
காணும்நீ யோஒரு தாமரைப் பூந்தடாகம்
அன்பினில்நீ காவிரிவெள் ளம் !

----கவின் சாரலன்

ப ஃ றொடை வெண்பா
நாலடிக்கு மேல் ஐந்து அடியிலிருந்து பன்னிரண்டு அடிவரை எழுதப் படுவது .
முந்தய கவிதையின் ஒரு கண்ணியை யாப்பு வழியில் தந்திருக்கிறேன்
யாப்பர்வளர்கள் ரசிக்க பயிலுக முயலுக .
மேலும் செய்வோம் .

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jan-16, 10:32 am)
பார்வை : 96

மேலே