விதை

வீழ்ந்துவிட்டேன் என
நினைத்தாயோ?
விழுந்தாலும்
விதையாகவே
விழுந்தேன்
நின் கால் தடம்
பதிந்த என்
நிலப் பிளவுகளில்
சிக்கிக் கொண்ட
விதைகள்
ஒவ்வொன்றும்
இறுகப் பற்றிக்கொண்டன
அடி உறைத்து
ஆணிவேர் இறுகி
நிலத்தின்
சத்துக்களையும்
நீரோட்டங்களையும்
தேடி உறிஞ்சி
தண்டு வழி
கிளைகளுக்குப் பரப்பி
புள்ளினங்களை
வாழ்வித்துக்
கொண்டிருக்கிறது
என்றேனும் ஒருநாள்
அம்மரத்தடியில் நீ
இளைப்பாறுதல்
தேடிடக் கூடும்
குருவிக்கு
கூடு கொடுத்த
கிளைகள்
அணிலென தெரிந்தும்
அடைக்கலம் தர
மறுக்காது ...........
...........சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (29-Jan-16, 12:51 am)
Tanglish : vaithai
பார்வை : 106

மேலே