காதலில் மலர
நீ செல்லும் வழிகளில்
ஆயிரம் பூக்கள்
மலர்ந்திருந்தாலும்
உனக்காகப் பூத்திருக்கு
என்றும் வாடா
முள்ளில்லா ரோஜா
என் இதயத்தில் ...!!
நீர் விடவேண்டா
உதிரத்தால் நனைப்பேன்
பட்டுப் போகாமல்
காப்பேன் என்
ஆயுள் வரை ....!!
ரோஜாவும்
புன்னகைத்தபடியே
காத்திருக்கிறது
உன் காதோரம்
காதலில் மலர !