களவாடிய பொழுதுகள்

களவாடி சென்ற என் மனதை...

உன் மௌனம் எனும் சிறையில் பூட்டி வைத்தால்...

உறவாடும் வார்த்தைகளை நான் பேசியே...

உன்னை மீட்பேன் வெண்ணிலவே...

உன் கரம் சேர்வேன் கண்மணியே...

கன நேரம் உன் அருகே நான் வாழா தருணம் வர நேர்ந்தால்...

என் கவிதைகள், கனவுகள், நான் இழந்தே தவிப்பேனடி...

உன் விழிகளால் மெருகேற்றிய என் இரவுகள் வெளிச்சமற்றே...

வழிந்தோடும் கண்ணீரில், என் கற்பனைகள் மூழ்குமடி...

எழுதியவர் : Kabir (17-Feb-16, 11:37 am)
பார்வை : 125

மேலே