இது ஒரு தமிழனின் நப்பாசை

இயக்கங்கள் பல உருவாகியதும் ,
அண்ணன் ஒரு இயக்கம்
தம்பி ஒரு இயக்கம் என்று
தமிழன் இன்னல்கள் தீர்கவென்று
எண்ணினோம் தமிழர் நாம்
மகிழ்ச்சிகொண்டு !

பின்பு தமிழரை தீர்த்துக்கட்டவே
தோன்றின
என்றது அவர்கள் செயல்கள் ,
எத்துவார் புத்தி கேட்டு
தலைமைக்குப் பந்தாட்டம்
போட்டுக்கொண்டு

பகைமையை தீர்கவே
அண்ணனை கொண்டு தம்பியையும்
தம்பியை கொண்டு அண்ணனையும்
சுட்டு கொன்றனர் அன்று

இப்போது கூட
பழையதையெல்லாம் மறந்து
ஒற்றுமையாய் ஒன்று சேர்ந்து
ஒரு தலைமையில் பயணிக்க மறுக்கின்றனர்

ஒன்றுபட்டு ஒருதலைமையின் கீழ்
அணி திரண்டால் மாத்திரமே
தமிழன் கனவு நனவாகும் என்பதே
உண்மை உறுதி
அதுவரை தமிழன் ஏமாற்றுக்காரரிடம்
ஏமாந்து கொண்டேயிருப்பான் என்பதும் உறுதி

தலைமை தாங்குபவர்
பணம் பதவி மோகம் அற்றவராக
இருந்தால் மாத்திரமே
தமிழன் விடிவுக்கு எதிர்காலம் உண்டு

இது ஒரு தமிழனின் நப்பாசை

எழுதியவர் : (18-Feb-16, 2:53 am)
பார்வை : 87

மேலே