kavithasan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  kavithasan
இடம்:  FRANCE
பிறந்த தேதி :  12-Jul-1961
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Feb-2012
பார்த்தவர்கள்:  418
புள்ளி:  48

என்னைப் பற்றி...

I AM KAVITHASAN FROM FRANCE

என் படைப்புகள்
kavithasan செய்திகள்
kavithasan - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2024 2:05 am

குத்தும் கூர்வாளாய்
விழிகளும் நோக்கிட//
நோக்கிடும் பொழுதினில்
நுண்ணிய ஆசைகள்//
ஆசைகள் மலர்ந்திட
அன்பான பெண்ணவள்//
பெண்ணவள் ஒருத்தியும்
பெற்றவள்போல் இல்லையென்றேன் //
இல்லையே என்றிட
இன்முகத்தோடு வந்தவள்//
வந்தவள் என்றுமே
வாழ்க்கையின் துணைவியே //
துணைவியே ஆனாலும்
துன்பமே இல்லாமல் //
இல்லாமல் வாடினாலும்
இன்பத்தில் மயங்கியே //
மயக்கிடும் மங்கையால்
மதியிழந்த மன்னனாய் //
மன்னவன் நெஞ்சத்தில்
குத்தும்கூர்வாளாய் விழிகளும்//
கவிதாசன்

மேலும்

kavithasan - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2024 2:02 am

தித்திக்கும் தீ
நீயே கண்ணே//
கண்ணே எந்தன்
காதலின் உயிரே//
உயிரோடு இணைந்தே
உறவாடும் பெண்ணே //
பெண்ணே உந்தனில்
பேராசை கொண்டேனே//
கொண்டிடும் மனசைக்
கொடுத்தேனே உன்னிடம் //
உன்னோடு என்றுமே
உறங்கிட நினைப்பேனே //
நினைப்பேன் காலமெல்லாம்
நிழலாவேன் தேவியே //
தேவியே தித்திக்கும்
தீ நீயே //
கவிதாசன்

மேலும்

kavithasan - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2024 2:26 am

உயிராக நீயிருந்து
உறவாட வந்தவளே//1
பூவாகி மணம்வீசி
சுவாசத்தில் கலந்தவளே//2
மனம்நோகா மங்கையாகி
மகிழ்ச்சியிலே வைப்பவளே/3/
வாடாத மலராக
வாழ்வெல்லாம் ஒளிவீசிட//4
தேவதையே உனைத்தானே
தேடுகின்றேன் தேசமெங்கும்//5
பாட்டுக்கு இசைபோல
உன்பார்வையிலே வசமாகி//6
பாவாடை தாவணியில்
பார்ப்பதற்கு அழகியென //7
உன்முகம் பார்த்திடவே
துடிக்கின்றேன் நாளெல்லாம்//8
நீயின்றி நானில்லையே
நிழலாக தொடர்கின்றேன்//9
நிசமாக நீவந்தால்
நினைத்தபடி வாழ்ந்திடலாம்//10
கவிதாசன்

மேலும்

kavithasan - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2024 2:22 am

உணவினைக் கண்டதும்
உதட்டிலே புன்னகை// 1
வயதான பாட்டியின்
வாயுமோ பொக்கை//2
முதிர்ந்த காலமதில்
உடலினிலே கவனம்வைத்து//3
சுவைக்காக உண்ணாமல்
சத்தாக உண்டிடு //4
முடிந்தவரை தவிர்த்துவிடு
தீங்கான உணவுதனை//5
பால்மணம் மறவாத
பாலகன் தட்டிலே //6
அன்னத்தின் அளவுமோ
அதிகமாய் உள்ளது //7
பல்லில்லாக் குழந்தையின்
வயிற்றுக்குப் பங்கம்வரா //8
பிள்ளைகள் நலந்தனில்
பெற்றவர் அக்கறையுடன் // 9
பிற்கால வாழ்க்கைக்கு
பேருதவி புரிந்துவிடும் //10
கவிதாசன்

மேலும்

kavithasan - kavithasan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Feb-2016 10:49 pm

என் எழுது கோலுக்கு
ஏக்கங்கள் நிறைய உண்டு
தமிழுக்கு தாக்கங்கள் !
திசை எட்டும்
சிதறியிருக்கும் எம்மினம்
வலிகள் சுமந்து ,
வாழ்வதற்காய் அலைகின்றனர் !
நிமிர்ந்து நின்று
உரிமை கேட்டவர் ,
காணமல் போனோர் பட்டியல் !
நீளும் துயரத்தில்
சிறைகளில்
விடியலை தேடும் உறவுகள் ,
விதியென நொந்துகொள்ள
இன்னும் என்ன
மந்தைகளா நாங்கள் !
சாபத்தின் சரித்திரங்கள்
ஈரமற்று தொடர,
கடந்த காலங்களின்
அவ நம்பிக்கைகளை
மாற்றுவோம் வாருங்கள் !
ஒன்றுபட்டு…………………………..

மேலும்

ஒற்றுமை எனும் சமுதாய வேலியை எத்தனை ஆயுதங்கள் கொண்டும் வீழ்த்த முடியாது 20-Feb-2016 9:13 am
அருமையான சிந்தனை - மு.ரா. 19-Feb-2016 11:37 pm
kavithasan - kavithasan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Apr-2018 3:52 am

படித்தவன் தமிழன் என்று
பறைசாற்றியது யாழ் மண்.
எங்கும் இல்லா நூல்களெல்லாம்
கொட்டிக்கிடந்தது யாழ் நூலகத்தில்
அறிவாளியாக இருக்கும் தமிழன்
இன்னுமா பேரறிவாளனாக வரவேண்டும் !

தீ என்னும் வஞ்சகத்தால் நூலகத்தை
பொடிசாம்பல் ஆக்கிவிட்டு
படித்தவன் எவரும் இல்லாதிருக்க
பள்ளிமாணவருக்கே !

நெஞ்சத்தில் வஞ்சமுடன்
நிறைவேற்றியது போதைவஸ்தை
ஆண்டுஆண்டாய் அடிமைப்பட்டுக்கிடந்த
ஒரு சில தமிழர் கூட்டம்
அதற்குமா விதிவிலக்கு !

எத்தனை துயர் வரினும் ஏங்காத தமிழரினம்
இதற்குமட்டும் அடிமையாகி ஏன் தான் அழிகிறது
சிங்களம் நினைத்தபடி சிதறியது தமிழரினம் !

போதைக்கு அடிமையாக்கி
வாள் கத்தி கோட

மேலும்

kavithasan - kavithasan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2016 1:53 am

செந்தமிழும் ,சிங்களமும்
சேர்ந்து வாழமுடியுமா?
சேர்ந்து வாழமுடியுமா?

சிறுத்தைகளும் ,ஓநாய்களும்
கூட்டில்
இணைய முடியுமா........
ஒரு கூட்டில் இணைய முடியுமா?

பச்சோந்திக் கூட்டம் எல்லாம் .....
பகடை வித்தை காட்டுது !

புலி வந்து
விட்டதென்றால்
ஓட்டம் பிடித்து ஓடுது ......
ஓட்டம் பிடித்து ஓடுது !

அரசிடம் தஞ்சம் கேட்டு
மண்டியிட்டு அலையுது ......
மண்டியிட்டு அலையுது !

புலிகளை அழித்து நீயும்
விதைத்து விட்டாய் ......
சிங்களமே !

விதை எல்லாம் முளைக்கும்
என்று
உனக்கு எண்ணத்
தெரியலேயே.......
உனக்கு எண்ணத்
தெரியலே !

முளைத்த பின் தாக்கு பிடிக்க
மு

மேலும்

முரண்பாடுகள் இம்மண்ணில் என்றுமே நிரந்தரமாக உறங்காது 15-Sep-2016 10:57 am
kavithasan - குமரிப்பையன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2016 2:22 am

தமிழா தமிழா சற்று சிந்தித்து பார்,
*கட்சத்தீவு உன்னுடையது
ஆனால் நீ போக
முடியாது,
*வங்கக்கடல் உன்னுடையது
ஆனால் நீ மீன்
பிடிக்க முடியாது,
*காவிரி ஆறு உன்னுடையது
ஆனால்உனக்கு தண்ணீர் கிடையாது,
*முல்லைப்பெரியாறு உன்னுடையது
ஆனால்
உன்னால் நீரை தேக்க முடியாது,
*பாலாறு உன்னுடையது
ஆனால் அதிலிருந்து
நீரைப் பெற முடியாது,
*நெய்வேலி உன்னுடையது
ஆனால் 75%
மின்சாரம் வெளி மாநிலத்திற்கு,
*இராசராசன் கட்டிய பெரிய கோவில்
உன்னுடையது ,
ஆனால் தமிழில் நீ வழிபட முடியாது,
*நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது
ஆனால் தமிழில் வழக்காட முடியாது,
*அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,
ஆனால்
தமிழில் உயர்கல்வ

மேலும்

விடிவு காலம் நிச்சயம் பிறக்கும்..! நம்புவோம்!! 14-Dec-2016 8:28 pm
இந்த கேடு கெட்ட அரசியல் வியாபாரிகள் நம்மை ஒன்றுசேர விடமாட்டார்கள்.! சாதியாலும் மதத்தாலும் பிரித்தாழ்கிறார்கள். 18-Sep-2016 1:49 pm
பயிர்கள் வாடினாலும், உயிர்கள் போனாலும் பிரதம மந்திரிக்கு மாநில அரசியலில் தலையிட உரிமையில்லையாம். அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி குறுக்குழவு ஓட்ட நினைக்கிறார்கள். பிறமா நிலம் என்றால் ஒரு நீதி, தமிழ்நாடென்றால் ஒரு நீதி. ஆயிரம் ஓட்டைகளில் ஒட்டடையாகி நிற்கும் இந்த சட்டங்களை தூக்கி வீசவேண்டும். எதற்கும் உதவாத சட்டங்கள் எதற்கு. முதலில் தமிழர்கள் நாம் அரசியல் பாகுபாடின்றி ஒன்றிணைவோம். இனியும் விழித்துக்கொள்ளாவிட்டால் எல்லாம் நாசம்தான். 18-Sep-2016 1:16 pm
அஹிம்சை முறையிலா..!!! அன்று... பாமர மக்கள்.. படிப்பு குறைவு.. நாட்டுக்காக உழைப்பு.. நல்ல தலைவர்கள்..! இன்று.. படித்த மக்கள்.. நடிக்கும் கூட்டம்.. வீட்டுக்காக உழைப்பு.. கெட்ட தலைவர்கள்..! ஓசை முடங்கிய மாக்கள்.. ஓசியில் வீழும் மக்கள்.. ஆழும் அரசுகள் சொல்லும்.. ஆசை அரசியல் கொல்லும்.. இங்கு இனி அகிம்சை எப்படி வெல்லும்.? உங்கள் கேள்வி நியாயமானதே.. ஆனால்.. வெல்லுமா.!! உங்களைபோல் நானும்..??!! 17-Sep-2016 3:36 pm
kavithasan - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2014 9:57 am

இன்றைய பட்டி மன்ற கேள்வி.

பேச்சாற்றல் மிக்கவர் ஆண்களா? இல்லை பெண்களா?

யோசித்து கருத்துகளை எழுத்துங்கள்.

மேலும்

இருவரும் இல்லை குழந்தைகளே பேச்சாற்றல் மிக்கவர்கள் ........................ அவர்கள் தமிழ் பேச்சு உரை நடையும் இலக்கியமும் கலந்திருக்கும் அவர்கள் வினவும் விசித்திரமான கேள்விகளுக்கு இன்றும் பதில் இல்லை............................................................. 16-Dec-2014 9:48 am
பெண்களே 15-Dec-2014 12:45 pm
தோழா..! கல்யாணமான ஆண்களை கேட்டு பாருங்க.. பேச்சாற்றல் உள்ளவர்கள் பெண்கள் தான் என்பார்கள். எதிர்வாதம் பேசவே முடியாதாம்...! ம்ம்ம்ம் :) 15-Dec-2014 11:37 am
kavithasan - kavithasan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Dec-2014 4:25 am

பொக்கிசமாய் வளர்த்த பொண்ணு
புறமுதுகு காட்டி எங்கோ
புறப்பட்டுப் போனதேனோ !
காமம் என்னும் காதல் வலையில்
கண்டவள் பின் திரிந்த ஒருவன்
கதைகள் எதுவும் தெரியா பொண்ணு
கை பிடிக்க சென்றாளோ !

பெற்றவர் மனம் தனையே
காதலுக்கு தான் எதிரி என்று
நம்பவே வைத்துவிட்டு
கழுத்தையே நெரித்ததுபோல்
கரை ஒதிங்கிப் போனாளோ!

வந்தகடன் கொடுக்கவில்லை
விசா எதுவும் அவனுக்கில்லை
வேலையற்ற வீணகனாய்
வீதி எல்லாம் சுற்றிவிட்டு
காமம் என்னும் பசிதீர்க்க
ஆசை பல வார்த்தைகூறி
அழைத்தே சென்றானோ !

எத்தனையோ பெண்களை ஏமாற்றி
கடைசியில் ஏமாந்து
இருதலைக் கொள்ளி எறும்பாக
இப்பொண்ணின் நிலையாச்சு

உயிர் அ

மேலும்

அருமையான வரிகள் 15-Dec-2014 1:28 pm
மேலும்...
கருத்துகள்

மேலே