இரசிகன்
பாலைக் காணவில்லை
பதற்றத்தில் அம்மா
பாலாபிஷேகம் செய்ய
வைத்த பாலாடா என்று
மகனிடம் சொல்ல
மகனோ பால் பசிக்கும்
குழந்தைக்கு கொடும்மா
அதை விட்டு
கல்லுக்கு விரயம்
செய்யாதே ...
சொல்லாதே அப்படி
ஆகிவிடும்டா சாமி குத்தம்
என்று அம்மா
மகனோ
மெல்ல மெல்ல
ஏறினான்
பொழிந்தான்
பாலை
தன் கதாநாயகனின்
பசிக்கொண்ட
கட்-அவுட்டுக்கு …
- செல்வா