"சுகம்"
இருள் சூழ்ந்த வானத்தில்
நான் மட்டும் மிதக்கின்றேன் !
நித்தம் நான் சுவாசிக்கிறேன்
நிசப்பதத்தை உணர்கின்றேன் !
நீர்மூழ்கி கிடக்கின்றேன்
நின் உணவை பகிர்கின்றேன் !
பால் நிலவும் துணையில்லை
பகலவனும் வருவதில்லை !
நட்சத்திர கூட்டமில்லை
நனைந்தாட மழையில்லை !
இவை கொண்ட இவ்வுலகைகாட்டிலும்
என் தாயின் கருவறை சுகம்தானது !!!.......