இயல் இசை நாடக முத்தமிழ்

இசை பாடும் குயில் ஒன்று
மலர்த் தோட்டத்தில் நுழைந்தது
பூக்கள் மலராத தோட்டத்தில்
வாய்மூடி மௌனமாய் இருந்தது
கவி எழுத கணினியுடன் நான் நுழைந்தேன்
கவின் மொட்டுக்கள் இதழ் பிரித்து மலர்ந்தது
தென்றல் ஆடிவர மகிழ்ச்சியில் இசைக் குயில் பாடிட
இளவேனில் வண்ணமலர்த் தோட்டம்
இயல் இசை நாடக முத்தமிழ் ஆனது !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Apr-16, 9:39 am)
பார்வை : 1300

மேலே