மாயை மழலை- சந்தோஷ்

கரு முடிகள் நிறைந்த
என் நெஞ்ச மஞ்சத்தில்
மயிலிறகாய் வருடி
படுத்திறங்கியவாறு
கேட்கிறாள் மகள்
“ ஒரு கதை சொல்லுப்பா”


குழந்தையின் கெஞ்சுதல்களும்
தகப்பன்களுக்கு அதிகார உத்தரவுதானே..
சொல்ல ஆரம்பித்தேன்..
”அய் ஜாலி ஜாலி..
அய்ய...
அய்யோ அப்படியா?,
ஒஹோ.. ஏன் அப்படி?
பாவமில்லப்பா,
அவன் ஏன் அப்படி சொன்னான்?,.
ரொம்ப கெட்டவளா பா?,
அப்புறம் என்னாச்சி பா?,
சரி சரி பா..”
என்றவாறே
உறங்க ஆரம்பித்தாள்.


என் நெஞ்சத்தில்
சிறு வெண்புறா
உறங்க ஆரம்பித்ததுப் போல
சொர்க்க மெத்தையில்
விழிமூடி அயர்ந்து விட்டேன்...


சில நாழிகைகள் கழித்து....


வெயில் கதிர்கள்
விழியில் பட்டு
விடியல் வந்தவிட்டதாய்
உணர்ந்தவாறு
எந்தன் விரல்கள்
தொட்டுத்தடவிய
என் நெஞ்சமெல்லாம்
துயரப் பாரம்.........!
ம்ம்
என் எதிர்ப்புறம்.....
கர்ப்பணியாக என் மனைவி
புகைப்படத்தில்...

**

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (3-Apr-16, 9:40 pm)
பார்வை : 88

மேலே