சிந்துப்பாடல் --- ஓயிற்கும்மி --- 3
பாடுங்கள் சிந்துப்பா பாரினில் கந்தனைப்
பண்களால் வாழ்த்தியப் பாடலன் றோ.
பலனேமிகு நலமேதர நிகரேயிலை உறவேதரு
பாசமும் நேசமும் பன்முக மே .
செய்கின்ற தொண்டுகள் செம்மையை வாழ்வினில்
சேர்த்திடும் கந்தனின் சேவையன் றோ.
செயமேதர விதியேயென வளமேதரு அழகேவர
செப்பிடும் நல்லறம் நன்மையன் றோ.