உழைப்பே உயர்வு தரும் கவிதை

இன்னுங் கொஞ்ச மிறங்கிப் பார்ப்பது

தன்னுள் மிஞ்சும் தன்னம் பிக்கை



அடைந்ததே போதுமென் றடங்கிப் போனால்

அடையும் ஆசை யடங்கிப் போகும்




மேலே தொடர்வது என்பது சூட்சமம்

மேலே எழுந்திட வைத்திடும் சூத்திரம்




படிபடி படிக்கப் பழகும் நாக்கு!

அடிஅடி வெடிக்கும் சோம்பல் போக்கு




கவிதை எழுதிக் கலக்கும் பொழுது

புவியில் உழுத புலமை வழுத்தும்




அடாத பிழைகளால் அடுத்தே தோற்கின்

விடாத முயற்சியால் விளையும் வெற்றி




தேனைச் சேகரிக் கத்தான் தேனீ

ஊனைச் சேர்க்கும் ஓட்டம் பார்நீ




வாசல் தேடி வருவது வாய்ப்பு

பேச வேண்டி புறப்படல் பொறுப்பு




செவிகளை இலைகளாய் விரித்து வைத்தால்

செவிக்குண வுகளாய் செரிக்க வைக்கும்




-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

எழுதியவர் : கவியன்பன் கலாம் (23-Apr-16, 1:10 pm)
பார்வை : 543

மேலே